Sunday, February 20, 2022

கொத்தவரங்காய்

 கொத்தவரங்காய்

நுரையீரலுக் கென்றே கடவுளால் படைக்கப்பட்ட காய் ஆகும்.

இதை யாரும் அதிகம் வாங்கி  சாப்பிட மாட்டார்கள்  பத்து ருபாய்க்கு பை நிறைய  கிடைக்கும்

இது கொரோனா நோய்   விரைவில் குணமடைய நல்ல  மருந்தாக உள்ளது என்று சொல்லபடுகிறது.

கொத்தவரங்காய் ஒருவருக்கு குறைந்தபட்சம் கால் கிலோ வாங்கி நாரெடுத்துவிட்டு சிறு பொடியாக வெட்டி சிறிது மிளகுத் தூள் போட்டு கொதிக்க வைத்து நீரை அருந்திவிட்டு காயை சாப்பிட்டுவிட வேண்டும். தொடர்ந்து சுமார் ஒரு வாரம் சாப்பிட்டால் நுரையீரல் காற்று தாராளமாக உள்வாங்கி மூச்சுத் திணறல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும்.

நான் இணையத்தில் இதன்  இயல்புகளை ஆராய்ந்தேன்

இது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் வல்லமை பெற்று  இருக்கிறது என்றும்     இது உடலில் சர்க்கரையின்  அளவை சமபடுத்துகிறது என்றும் இது மூட்டு வலியை  சரி செய்கிறது என்றும் இது அஜீரண கோளாறுகளை  சரி செய்கிறது என்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பை  குறைக்கிறது என்றும்  சிவப்பணுக் களின் எண்ணிக்கையை   அதிகரிக்கிறது என்றும்  இதய நோய் வராமல் தடுக்கிறது  என்றும்  ஆஸ்துமா விற்கு நல்ல   மருந்து என்றும் நல்ல வலி நிவாரணி   மற்றும் கிருமி நாசினி என்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது  என்றும் இரத்த சோகைக்கு நல்ல மருந்து   என்றும்  சர்க்கரை நோயை குணப்படுத்து கிறது   என்றும்  கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத் திற்க நல்லது  என்றும்  குழந்தையின் எழும்பு மற்றும் முதுகு தண்டு வளர்ச்சிக்கு நல்லது என்றும் உடல் எடையை குறைக்க  சிறந் சிறந்த மருந்து என்றும் ஒவ்வாமையை போக்கவல்லது  என்றும் மன அழுத்தத்தை குறைக்கிறதாம் நரம்பு மண்டலத்தை சீராக வைக்கிறது என்றும் சரும பிரச்சினையை தீர்க்கிறது என்றும்  மலச்சிக்கலை போக்குகிறது என்றும்  ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது என்றும்  சூட்டை குறைக்கிறது என்றும் ஐன்னி வந்தால் சரிசெய்கிறது என்றும் அம்மை நோயை மூன்று நாட்களில் சரி   செய்கிறது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது

நான் நம்பவில்லை கொத்தவரங் காயில்   என்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை பார்த்துவிட்டு முடிவு செய்யலாம் என தேடி பார்த்தேன்

விட்டமீன் கே இருக்கிறதாம்  போலிக் ஆசிட் இருக்கிறதாம் நார் சத்து அதிகமாக இருக்கிறதாம் (நீரில் கரையும் நார்ச்சத்து மற்றும் நீரில் கரையாத நார்ச்சத்து)

இரும்பு சத்து இருக்கிறதாம்  கால்சியம் இருக்கிறதாம்  மற்றும் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த உதவும்  கிளைக்கோநியூட்டிரியன்ட் இதில் உள்ளதாம்

சுண்ணாம்பு சத்து இதில்   உள்ளதாம்  ஆன்டி-ஆக்ஸிடனஉள்ளதாம்  புரதச்சத்து உள்ளதாம்  இதற்கு மேல் என்ன   வேண்டும்

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில்  இருந்து வெளிநாடுகளுக்கு அதிகம்   ஏற்றுமதி செய்யப்படும் பொக்கிஷம்  இது

நாம் இதை மதிப்பதில்லை

நல்லதையும் நல்லவனையும்  நாம் எப்போ மதிச்சிருக்கோம்.

படித்தேன் பகிர்கிறேன்....

No comments:

Post a Comment