🌺🌺கோகினூர் வைரத்தின் கதை பகுதி 2
பிரகாச கல்லின் சாபம்
ஒரு இருட்டு அறையில் வைக்கப்பட்ட விளக்கின் ஒளியை அந்த வெள்ளை கல் உமிழ்ந்தபோது அறை முழுதும் பிரகாசித்தது என்று கூறப்படுகிறது. வைரம் கண்டுபிடிக்கப்பட்ட ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளை சாளுக்கியர்கள் காகதியர்கள் ஆண்டு வந்தனர். கோஹினூர் வைரத்தை கண்டெடுத்த சாமானியன் ஒருவன் மன்னரிடம் கொடுத்து சன்மானம் பெற்றுக்கொண்டான். கோஹினூர் வைரத்தை பார்த்ததும் மக்களிடையே வதந்திகள் பரவ தொடங்கியது. இந்த வைரம் யாரிடம் இருக்கிறதோ அவரால் உலகத்தையே சொந்தம் கொண்டாட முடியும். ஆனால் ஏராளமான துரதிர்ஷ்டங்கள் அனுபவிப்பான் என்று செய்திகள் பரவத் தொடங்கியது.
இதன்மூலம் சபிக்கப்பட்ட வைரமாக பார்க்கப்பட்டது கோஹினூர். இதனால் வைரத்தை பெற்ற காகதிய மன்னன் அதனை அம்மன் கோவில் ஒன்றுக்கு தானமாக வழங்கினார். அந்த காலத்தில் அரண்மனை கருவூலங்களில் சேமித்து வைக்கப்பட்ட செல்வங்களை விட கோவில்களில் பலமடங்கு செல்வங்கள் இருந்தது. அப்போதுதான் டெல்லியை ஆண்ட மன்னர்களில் மிகவும் வலிமை மிக்கவரான அலாவுதீன் தென்னிந்திய படையெடுப்பு மேற்கொண்டார். தென்னிந்திய அரசுகளை அடக்கி ஒடுக்க நினைத்த அலாவுதீன் தனது தளபதியின் தலைமையில் பெரும் படையை அனுப்பி வைத்தார்.
கோஹினூரின் மதிப்பு
தேவகிரி , மைசூர் என ராஜ்ஜியங்களை வீழ்த்தி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தார் மாலிக் கபூர். கோட்டைகள் அனைத்தும் அவர்களால் சூறையாடப்பட்டன. அதோடு கோவில்களும் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்களை மாலிக் கபூர் டெல்லிக்கு எடுத்துச் சென்றார். அவற்றில் கோகினூர் வைரமும் ஒன்று. நாட்டு மக்கள் காணும்படி கொள்ளையடித்துக் கொண்டு வரப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டது. ஆனால் காகதிய தேசத்தில் கூறப்பட்டது போன்று சில நாட்களிலேயே அலாவுதீன் நோய் உற்றார். அதோடு சில மாதங்களிலேயே அதாவது 1316 ஆம் வருடம் அலாவுதீன் உயிரிழந்தார்.
அவரின் உயிரிழப்புக்கு சபிக்கப்பட்ட வைரம் தான் காரணம் என்று பலர் கூறுகின்றனர். அதன் பிறகு 200 வருடங்களுக்கு கோஹினூர் தொடர்பான எந்த குறிப்புகளும் இல்லை. டெல்லியை ஆண்ட சுல்தானிடம் சென்று பின்னர் பல கைகள் மாறி 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முகலாய பேரரசர் பாபரின் கைக்கு வந்தது கோகினூர் வைரம். கோகினூர் வைரத்தின் உறுதியான வரலாற்று குறிப்பு 1526 ஆம் வருடத்தில் இருந்துதான் தொடங்குகிறது. அப்போது பாபரின் வைரம் என்று அழைக்கப்பட்டது கோகினூர் வைரம். அதன் ஒளி வீச்சை கண்ட பாபர் அதன் மதிப்பை அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டபோது உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒருநாள் உணவுக்கு ஆகும் தொகை தான் இந்த வைரத்தின் மதிப்பு என அவரிடம் கூறப்பட்டது.
வைரம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் பட்டை தீட்டாமல் இருந்ததால் அதனை அழகுபடுத்த பாபர் நினைத்தார். எனவே 293 கேரட் எடை இருந்த வைரத்தை பட்டை தீட்ட பொற்கொல்லன் ஒருவனிடம் ஒப்படைத்தார். அதனை பொற்கொல்லன் என்ன செய்தார் என்பது தெரியாது 793 காரட் இருந்த வைரம் 186 கேரட் ஆக குறைந்து இருந்தது. கிட்டத்தட்ட 600 கேரட் வைரம் சேதாரம் ஆனது. இந்த கோஹினூர் வைரம் பாபரிடம் நிலைக்கவில்லை. அடுத்த சில ஆண்டுகளில் பாபரை எதிர்த்த இப்ராஹீமின் கைக்கு சென்ற கோஹினூர் வைரம் மன்னன் விக்ரம ஜித்திடம் சென்றது. இந்த காலகட்டத்தில் தான் புகழ்பெற்ற பானிபட் போர் ஆரம்பமானது.
No comments:
Post a Comment