Friday, February 18, 2022

கோகினூர் வைரத்தின் கதை பகுதி 1

கோகினூர் வைரத்தின் கதை பகுதி 1

கோஹினூர் வைரம் இந்த பெயரைக் கேள்விப்படாதவர்கள் இல்லை. இந்தியாவின் வரலாற்று பொக்கிஷம், உலகின் மிகப்பெரிய வைரங்களில் ஒன்று, இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரிக்கும் விலைமதிப்பற்ற ஆபரணம் மற்றும் இன்னும் பல வரலாற்று பெருமைகளை பெற்ற ஒரு சிறிய கல் தான் இந்த கோஹினூர் வைரம். இந்த வைரத்தை இதுவரை யாரும் விற்பனை செய்ததும் இல்லை விலை கொடுத்து வாங்கியதும் இல்லை. கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் அந்த வைரம் ஒரு நபரிடம் இருந்து வேறு ஒரு நபரால் அபகரிக்கப்பட்டு கை மாறுகிறதே தவிர யாரும் இதனை விலை கொடுத்து வாங்கியது கிடையாது.

இந்தியாவுக்கு சொந்தம் என்று கூறப்படும் இந்த கோஹினூர் வைரம் முகலாயர்கள், சீக்கியர்கள் என பல கைகள் மாறி இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு எப்படி சொந்தமானது?

கோஹினூர் என்றால் பெர்சிய மொழியில் மலையின் ஒளி என்று பொருள். இந்த ஒளியால் வேட்டையாடப்பட்ட ராஜாக்களின் வரலாறும் அது பயணித்த விதமும் பயங்கரமானது. இந்த கோஹினூர் வைரத்திற்கு மிகப்பெரிய வரலாறு இருந்தாலும் ஆதாரமில்லாத வதந்திகளும் செவி வழி செய்திகளும் தான் அதிகமாக இருக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பண்டைய சமஸ்கிருத நூலில் கோஹினூர் பற்றிய குறிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அதன் பின் சுமார் 4300 வருடங்களுக்கு முன்பு கோஹினூர் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. 13ஆம் நூற்றாண்டில் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே கொல்லூர் எனும் கிராமம் கிராமத்தில் இருந்த சுரங்கத்தில் கோஹினூர் வைரம் வெட்டி எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் இன்னும் சிலர் கோஹினூர் கண்டெடுக்கப்பட்ட போது இந்தியா உட்பட உலகில் எங்குமே வைர சுரங்கங்கள் இல்லை என்று கூறுகின்றனர். 1720களில் பிரேசில் நாட்டில் தான் முதல் வைர சுரங்கம் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பு அல்பேனியா கருப்பு வைரத்தை தவிர வேறு எந்த பிரசித்தி பெற்ற வைரங்கள் தொடர்பான குறிப்புகளும் இருந்தது இல்லை.

எப்படி கோஹினூர் வைரம் கண்டெடுக்கப்பட்டது?

13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குண்டூர் மசூலிப்பட்டினம் இடையே அமைந்திருந்த ஆற்றின் கரையோரத்தில் கோஹினூர் வைரம் கண்டெடுக்கப்பட்டதாக சில வரலாற்று அறிஞர்கள் வாதிடுகிறார்கள். அழிவின் விளிம்பில் இருந்த ஆறு பூமியின் கீழ் புதைந்திருந்த பல்வேறு அரிய வகை கற்களை மேற்பரப்புக்கு கொண்டு வந்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர். பச்சை, சிவப்பு, நீலம் என வித்தியாசமாக இருந்த கற்களில் பிரகாசமான ஒளி பிரதிபலித்து கண்களை கூச செய்ததில் வெள்ளைக் கல்லும் ஒன்று. அதுதான் கோஹினூர் வைரம். அப்போது அதுக்கு கோல்கொண்டா வைரம் என்று பெயர் சூட்டப்படுகிறது.

No comments:

Post a Comment