Saturday, December 25, 2021

பதில் தேடுகிறேன் தொடர் - 1

பதில் தேடுகிறேன் தொடர்:-


 காலையில் எழுந்து சீதாலட்சுமி க்கு நினைத்து நினைத்து மனம் ஆறவே இல்லை!

சீதாலட்சுமியின் மூன்றாவது பெண் ருக்மணியை உறவிலேயே திருமணம் செய்து கொடுத்தோம்! அந்த அண்ணன் பையனுக்கு தான் மூன்றாவது பெண் ருக்மணியை திருமணம் செய்து கொடுத்தது! திருமணம் முடிந்து 15 நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் அண்ணன் மனைவி நீ போய் உன் அம்மாவிடம் 500 ரூபாய் வாங்கி வந்தால்தான் இங்கு எங்களுடன் வாழலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டாள்! இந்த குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் 500 ரூபாய் என்பது நினைத்துப் பார்க்கக்கூட முடியாத ஒன்று!

கணவர் சுந்தரேச சாஸ்திரிகள் என்னைவிட வயது கொஞ்சம் நிறைய வித்தியாசம் உள்ளவர்! ஏதோ அவர் உபாத்தியாயம் செய்து கொண்டுவரும் சொற்பமான பணத்தில் ஜீவனம் நடக்கிறது! பெரியபட்டி லட்சுமி என்பவளை அத்தை பையனுக்கு கட்டிக் கொடுத்தாச்சு! அவள் சௌகரியமாக வாழ்கிறாள்! இரண்டாவது பையன் ராமச்சந்திரன்! எஸ்எஸ்எல்சி முடித்து ஒரு புத்தகக் கடை வைத்திருக்கிறான்! அவன் கடை வைத்து வியாபாரம் ஆரம்பித்தது முதல் தன் அப்பாவை அதாவது சுந்தரேச சாஸ்திரிகளை உபாத்தியாயத் திற்கு போக வேண்டாம் என்று சொல்லிவிட்டான்! மூன்றாவது பெண் சரஸ்வதி! அவளை வெளியிடத்தில் திருமணம் செய்து கொடுத்தாச்சு! அந்த மாப்பிள்ளை அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்!அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள்!! கஷ்ட ஜீவனம் தான்!

இந்தநிலையில் நாலாவது பெண் ருக்மணியை புகுந்த வீட்டில் இருந்து ரூபாய் 500 கேட்டு அனுப்பி விட்டார்கள்!

இன்று அமாவாசை காலை காய்கறிகளை நறுக்கிக் கொண்டு சீதாலட்சுமி மனம் இத்தனை யோசனைகளை செய்து கொண்டிருக்கும் வேளையில்... எதிர்வீட்டில் வசிக்கும் பக்கத்தில் உள்ள பள்ளி ஹெட் மாஸ்டர் அவர் வீட்டு குழந்தையை அனுப்பி மாமா  கொஞ்சம

இன்னைக்கு எங்க ஆத்துல வந்து தற்பணம்   பண்ணிவைக்கசாசொல்லுங்கோ என்றுசோல்லிவிட்டுப் போனார்கள்!

நினைவுகலைந்த சீதாலட்சுமி வீட்டில் அடுத்த வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்! மனம் என்ன சும்மாவா இருக்கு? இப்போது வேறு யோசனை ஆரம்பம்! தன் பையன் அப்பாவை வெளியே எங்கும் காசுக்காக போக வேண்டாம் என்று தடுத்து இருந்தாலும் அவனுக்கு தெரியாமல் தன் கணவரை காலை எட்டரை மணிக்கு மேல் ஒன்றிரண்டு இடங்களுக்கு அனுப்பி தற்பணம் பண்ணிவிட்டு வரச் சொல்வாள்! அந்த காலத்தில் என்ன நான் கனா தான் தருவார்கள்! அது குடும்பத்திற்கு ஏதோ ஒருவித உதவியாக இருக்கும்!

அப்படி அன்று 10 மணிக்கு கணவர் வேலை முடித்து வீட்டுக்கு வந்துவிட்டார்!

No comments:

Post a Comment