Wednesday, March 9, 2022

வினைநீங்கு பதிகம்

 காஞ்சிபுரத்தில் இருந்து ‘ஓரிக்கை’ வழியாக, உத்திரமேருர் செல்லும் வழியில் அமைந்துள்ளது ‘திருமாகறல்.’

சேலம் கி.சுப்பராயப்பிள்ளை என்ற ஒரு சிவபக்தர் தனது 84வது வயதில் கீழே விழுந்ததில், அவரது முழங்கால் எலும்பும், இடுப்பெலும்பும் முறிந்த நிலையில் பெரிய மருத்து வர்கள் எல்லாம், குணப்படுத்த இய லாது என்று கைவிட்டுவிட்டனர். அவர் திருமுறையில் நூல்சாத்திப் பார்த்ததில், ‘வினைநீங்கு பதிகம்’ ஓதச் சொல்லி வழிகாட்டல் கிடைத்ததாம். அதன்படியே அவரும் அதை ஓதி வழிபட்டதில், ஓராண்டுக்குள்ளேயே எலும்புகள் கூடி - வாசியாகி, மீண்டும் நடக்கத் தொடங்கினாராம். இதுபற்றிய விவரம், தென்னிந்திய சைவ சித்தாந்த சங்க 1960ம் ஆண்டு வெளியீடு ஒன்றில் காணப்படுகிறது.

வினைநீங்கு பதிகம்.      

 1. விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடலரவம்

மங்குலொடு நீள்கொடிகண் மாடமலி நீடுபொழின் மாகறலுளான்

கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்

செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.


2. கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவி னெய்தியழகார்

மலையினிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்

இலையின்மலி வேல்நுனைய சூலம்வல னேந்தியெரி புன்சடையினுள்

அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே.


3. காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்

மாலைவழி பாடுசெய்து மாதவர்க ளேத்திமகிழ் மாகறலுளான்

தோலையுடை பேணியதன் மேலொர்சுடர் நாகமசை யாவழகிதாப்

பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே.


4. இங்குகதிர் முத்தினொடு பொன்மணிக ளுந்தியெழின் மெய்யுளுடனே

மங்கையரு மைந்தர்களு மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்

கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே

நுங்கள்வினை தீரமிக வேத்திவழி பாடுநுகரா வெழுமினே.


5. துஞ்சுநறு நீலமிரு ணீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்

மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கணட மாடமலி மாகறலுளான்

வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானொர்மழு வாளன் வளரும்

நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே.


6. மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்

இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்

மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே

உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர் வானுலக மேறலெளிதே.


7. வெய்யவினை நெறிகள்செல வந்தணையு மேல்வினைகள் வீட்டலுறுவீர்

மைகொள்விரி கானன்மது வார்கழனி மாகறலு ளானெழிலதார்

கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்

ஐயனடி சேர்பவரை யஞ்சியடை யாவினைக ளகலுமிகவே.


8. தூசுதுகி னீள்கொடிகண் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே

மாசுபடு செய்கைமிக மாதவர்க ளோதிமலி மாகறலுளான்

பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்

பூசுபொடி யீசனென வேத்தவினை நிற்றலில போகுமுடனே.


9. தூயவிரி தாமரைக ணெய்தல்கழு நீர்குவளை தோன்றமதுவுண்

பாயவரி வண்டுபல பண்முரலு மோசைபயின் மாகறலுளான்

சாயவிர லூன்றியவி ராவணன தன்மைகெட நின்றபெருமான்

ஆயபுக ழேத்துமடி யார்கள்வினை யாயினவு மகல்வதெளிதே.


10. காலினல பைங்கழல்க ணீண்முடியின் மேலுணர்வு காமுறவினார்

மாலுமல ரானுமறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்

நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்

ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே.


11. கடைகொணெடு மாடமிக வோங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்

அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தனுரையால்

மடைகொள்புன லோடுவயல் கூடுபொழின் மாகறலுளா னடியையே

உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைக ளொல்குமுடனே.

No comments:

Post a Comment