சப்பாத்தி குருமா
சமையலில் டிபன் வகைகளில் ஒன்று சப்பாத்தி.
👉 அந்த வகையில் சப்பாத்திக்கு ஏற்ற குருமாவை சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பீன்ஸ் - கால் கப்
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
கடுகு - கால் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 1
லவங்கம் - 1
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 10 பற்கள்
இஞ்சி - சிறு துண்டு
மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - அரை கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
🌟 சப்பாத்தி குருமா செய்வதற்கு முதலில் இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் தோல் நீக்கி வைத்துக்கொள்ளவும்.
🌟 பின்பு மிக்ஸியில் தேங்காய்த்துருவல், சோம்பு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு அரைத்துக்கொள்ளவும்.
🌟 அடுத்து வெங்காயம், உருளைக்கழைங்கு, தக்காளி, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
🌟 ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, பட்டை, கிராம்பு, லவங்கம், கறிவேப்பில்லை போட்டு தாளித்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
👉 வெங்காயம் நன்கு வதங்கியதும், அதனுடன் தக்காளியை போட்டு வதக்கவும்.
🌟 தக்காளி நன்கு வதங்கியதும், அதில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள காய்களை சேர்த்து, அதனுடன் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக மூடி வேக வைத்துக்கொள்ளவும்.
🌟 குருமா சுண்டி வரும்போது கொத்தமல்லித்தழைகளை தூவி இறக்கினால் மணமணக்கும் சப்பாத்தி குருமா ரெடி.
No comments:
Post a Comment