Tuesday, August 18, 2020

உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும்

[8/15, 07:46] +91 97870 31322: நேற்று என் மனைவி தான் யூ டியூப் ல் பார்த்த செய்தி பற்றி சொன்னார்.  அதில் ஒருவர் மகா பெரியவர் பற்றி சொல்லிக்கொண்டு வரும்போது ஒரு செய்தியை சொன்னார்.

மகாபெரியவர் உடல் நலம் பெற நாராயணீயத்திலிருந்து ஒரு ஸ்லோகத்தை சொல்லி  அந்த ஸ்லோகத்தை கடவுள் முன்  விளக்கேற்றி ஒரு டம்ப்ளரில் சிறிதளவு தண்ணீர் அங்கு வைத்து அந்த ஸ்லோகத்தை இருபத்தொரு முறை சொல்லி அந்த தண்ணீரை உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கோ கொடுத்தாலோ இல்லை தானே குடித்தாலோ உடல் பூரண நலம் பெரும் என்று தெரிவித்ததாக சொன்னாள்.

ஆனால் அந்த ஸ்லோகத்தை தமிழில் எழுதிகொண்டபோது உச்சரிப்பு சரியாக இருக்குமா என்ற குழப்பம் அவளுக்கு இருந்தது

இன்று காலை செய்த்திதாளுடன் ஆன்மீக மலர் என்று இணைப்பு இருந்தது. அதை திறந்ததும் பெரியவர் படத்துடன் மேலே சொன்ன நாராயணீய ஸ்லோகம் இருந்தது. என் மனைவிக்கு மிக்க மகிழ்ச்சி.  அதற்க்கு ஒரு காரணமும் உண்டு

இதில் ஆச்சர்யபடவைக்கும் விஷயம் ஒன்று உண்டு. நான் தினமணி தான் வாங்குவேன். இன்று தவறுதலாக தினமலர் போட்டுவிட்டார். அதில் தான் இந்த ஆன்மீக மலர் இருந்தது. என் மனைவிக்கோ தனது குழப்பத்தை போக்க மகாபெரியவர் தான் இன்று அந்த பேப்பரை போட்டுள்ளார் என்று ஆச்சர்யபட்டாள்.

அந்த ஸ்லோகம் எல்லோருக்கும் பயன் தரும்

अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे त्वमित्थमुत्थापितपद्मयोनि: । अनन्तभूमा मम रोगराशिं निरुन्धि वातालयवास विष्णो ॥

அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே த்வமிதமுத்தாபித பத்மயோனிஹி அனந்த பூமா மம ரோக ராஷிம் நிருந்தி வாதாலய வாச விஷ்ணோ

C&P from FB...... 🙏🙏🙏
[8/15, 07:46] +91 97870 31322: 🌻🍁🔥🌻🌿🍁🔥🌻🌿🍁🔥🌻🌿🍁🌻🌿🍁🌻🌿🍁🔥🌻

"உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?"

பெரியவாளுடைய இந்த அறிவுரை நம் எல்லோருக்கும் ஒரு சம்மட்டி அடி !

சிமிழி பிரஹ்மஸ்ரீ வெங்கட்ராம சாஸ்த்ரிகள் பெரியவாளுடைய அன்புக்கும் அபிமானத்துக்கும் ரொம்ப அருகதை உடையவர். அப்படியொரு அனுஷ்டானம் ! பெரியவாளிடம் பக்தி!

அவர் மறைந்ததும், அவருடைய பிள்ளைக்கு பால்யத்திலேயே ரெண்டு சன்யாசிகள் மூலமாக தேவி உபாசனை உபதேசிக்கப்பட்டது. 

பல ஆண்டுகள் உபாசித்தும் உபாசனையில் வாக்கு, சரீரம் ரெண்டும் ஈடுபடர அளவு, மனஸ் ஈடுபட மாட்டேங்கறது. 

அதனால மனசுக்கு சாந்தி கெடைக்கவேயில்லைஎன்ற இந்த உண்மையான எண்ணம் ரொம்ப வலுத்துக் கொண்டே போனது. பல வழிகளை கையாண்டும் ஒன்றும் பிரயோஜனமில்லை. பெரியவா மட்டுமே இதற்கு வழி காட்டமுடியும் என்ற நம்பிக்கையில் பெரியவாளிடம் வந்தார்.

கார்வேட் நகரில் ஒரு குளக்கரையில் அழகாக வேய்ந்திருந்த ஒரு சிறு கொட்டகையின் வாசலில் அமர்ந்திருந்தார். 

எத்தனைதான் அறிமுகம் இருந்தாலும், பூர்வர்கள் யார் யார் என்பதெல்லாம் தெரியாதது மாதிரி கேட்டுக் கொள்வார். 

நாம் இன்னாரது வம்சத்தில் வந்திருக்கிறோம் என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வதை அவர் மிகவும் விரும்புவதாக இருக்கும். 

இந்த உபாசகரும் தான் சிமிழி சாஸ்த்ரிகள் பிள்ளை என்று சொல்லிவிட்டு, தன் மனஸ் படும் கஷ்டத்தை சொல்லி, வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினார். அப்போது நடந்த சம்பாஷணை..

"தேவி உபாசனை பல வர்ஷங்களா பண்ணிண்டு இருக்கேன். ஆனா, மனஸ் துளிகூட ஈடுபடலை. ரொம்ப உறுத்தறது. எனக்கு ஒரு வழி காட்டணும் பெரியவா…"

"என்ன சொல்றே? அதனால என்ன தப்பு?"

"மனஸ் தனி வஸ்துவா இருக்கறதால, பூஜை முழுமையாகாத மாதிரி இருக்கு.."

"அதுக்கு நா என்ன பண்ணறது?"

"மனஸ் ஈடுபட ஒரு வழி காட்டணும்…"

"என்ன படிச்சிருக்கே?"

சொன்னார்...

🌻🍁🔥🌻🌿🍁🔥🌻🌿🍁🌻

"இத்தனை படிச்சும், ஒனக்கு விவேகமில்லே! ஒன் மனஸை நா திருத்த முடியாது"
🌻🍁🔥🌻🌿🍁🔥🌻🌿🍁🌻
"என்னாலேயே என்னை திருத்திக்க முடியலை. அதான் பெரியவாட்ட வந்தேன்…"
🌻🍁🔥🌻🌿🍁🔥🌻🌿🍁🌻
"என்னை என்ன செய்ய சொல்றே?"

🔥🌿🔥🌿🔥🌿🔥🌿🔥🌿🔥

"மனஸ் சாந்தி அடையணும்.."
🌻🍁🔥🌻🌿🍁🔥🌻🌿🍁🌻
"நீ என்ன பூஜை பண்றே?"
🌻🍁🔥🌻🌿🍁🔥🌻🌿🍁🌻
"அம்பாளை படத்துலேயும், விக்ரஹத்துலேயும், யந்த்ரத்துலேயும் பூஜை பண்ணறேன்…"
🌻🍁🔥🌻🌿🍁🔥🌻🌿🍁🌻
"ரொம்ப சரி. படத்ல அம்பாள் இருக்கறதா நெனச்சுதான பூஜை பண்றே?"
🌻🍁🔥🌻🌿🍁🔥🌻🌿🍁🌻
ஆமாம்...
🌻🍁🔥🌻🌿🍁🔥🌻🌿🍁🌻
"அப்போ.இந்த கொறையைக் கூட அவகிட்டயே சொல்லியிருக்கலாமே?  நெறைய படிச்சிருக்கே...படம், விக்ரஹம், யந்த்ரம்.ன்னு எல்லா எடத்துலேயும் அவ இருக்கறதா பூஜையும் பண்றே. ஆனா, ஒண்ணுலயும் ஒனக்கு பிடிப்போ, நம்பிக்கையோ இல்லை. அம்பாள் ஓங்காத்துலேயே, ஒன் பக்கத்துலேயே இருக்கறச்சே, ஒன் கொறையை அவட்ட சொல்லி அழத் தெரியலையே! இனிமே அவகிட்டயே சொல்லி அழு! இங்க வராதே. நான் என்ன பண்ண முடியும்?"
🌻🍁🔥🌻🌿🍁🔥🌻🌿🍁🌻
மிகவும் சூடாக பதில் வந்ததும், உபாசகர் விக்கித்து நின்றார். மனஸ் இந்த பேரிடியை தாங்கமாட்டாமல், கண்களில் ஜலம் முட்டி நின்றது. நமஸ்காரம் பண்ணிவிட்டு உத்தரவு வாங்கிக் கொள்ள யத்தனித்தார். அம்பாள் மனஸ் இறங்கினாள்..
🌻🍁🔥🌻🌿🍁🔥🌻🌿🍁🌻
"ரொம்ப கோவிச்சுண்டுட்டேனா ! நீயே ரொம்ப ஆசையா அம்பாளை உபாசனை பண்றே! மனஸ் ஈடுபடலை..ன்னு ஒனக்கே தெரியறது. உபாசனைன்னா சமீபத்ல இருக்கறதுன்னு அர்த்தம். ஒனக்கு எப்பவுமே பக்கத்ல இருக்கறவள் கிட்டே ஒன்னோட கொறையை சொல்லாம, நீட்டி மொழக்கிண்டு எங்கிட்ட வந்தியே!.ங்கறதாலதான் கொஞ்சம் அப்பிடி ஒரைக்கறா மாதிரி சொன்னேன்."
🌻🍁🔥🌻🌿🍁🔥🌻🌿🍁🌻
"இனிமே.என்ன கொறையானாலும், எதுக்கும் அவளைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது ! நீ பூஜை பண்ற தெய்வத்துகிட்ட, அது அம்பாளோ, சிவனோ, விஷ்ணுவோ, பிள்ளையாரோ.யாரா இருந்தாலும் சரி, அவா கிட்டேயே கேட்டாத்தான் ஒன்னோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும். உன் உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?..நம்பிக்கைதான் எல்லாம். அவளோட அனுக்கிரகம் ஒனக்கு நிச்சயமா உண்டு! 
🌻🍁🔥🌻🌿🍁🔥🌻🌿🍁🌻
கவலைப்படாதே..க்ஷேமமா இரு! என்று அபயஹஸ்தம் கொடுத்தார் மஹாபெரியவா!"

🔥🌿🍁🌻🔥🌿🍁🌻🔥🌿🍁🌻🔥🌿🍁🌻🔥🌿🍁🌻🔥🌿

ஜெய் ஸ்ரீராம்

🌻🔥🌿🌻🔥🌿🌻🔥🌿🌻🔥

ஜெய் ஸ்ரீ ராம்

🌻🍁🔥🌻🌿🍁🔥🌻🌿🍁🔥🌻🌿🍁🌻🌿🍁🌻🌿🍁🔥🌻

No comments:

Post a Comment