Tuesday, August 18, 2020

எதிர்பாராமல் கிடைத்த மஹா பெரியவா தரிசனம்

எதிர்பாராமல் கிடைத்த மஹா பெரியவா தரிசனம்,....                                                                                               
காஞ்சி பெரியவர் ஜெயந்தி. சுமார் 30 வருடம் முன்பு நடந்தது

என் தாயார் என்னை என் கோடை விடுமுறைக்கு அரக்கோணம் அத்தை வீட்டில் சில நாள் அழைத்து சென்ற பொழுது..

*பெரியவா ஜெயந்தி முன்றைய நாள்:

எங்கள் அத்தை, என் தாயை, அரக்கோணம் ராஜகோபால் ஐயர் வீட்டில் பெரியவா பெரிய படம் இருக்கும், அவர்கள் வீட்டில் பெரியவா ஜெயந்தி அன்று ஆயுட்ஷேம பூஜை செய்வார்கள், அதனால் இன்றே போய் பாத்து விடு வர அழைத்து சென்று இருகிறார்கள்.

அம்மாவுக்கு பெரியவா படம் பாத்தவுடன், அவரை நேரில் தரிசனம் செய்ய ஆசை, மனதார வேண்டி கொண்டு இருகிறார்கள்.. ஆனால் எவ்வாறு செல்வது.. பெரியவா இருப்பது கலவையில்.. நங்கள் இருப்பது அரக்கோணம்... பணம் பெரிய அளவில் இல்லாத குடும்பம்.

ராஜகோபால் ஐயர் வீட்டு, பாட்டி/மாமிக்கு என் அம்மாவை, நீங்கள் பெரியவா ஆயுட்ஷேம பூஜைக்கும் நாளை நிச்சயம் வரணும் என்று அழைப்பு விடுக்க. ..

ஜெயந்தி அன்று:

எப்பொழுதும் 6 கஜம் புடவை கட்டும் அம்மா, தீடிர் என 9 கஜம் பொடவை கட்டி போகலாம் என ஏதோ தோண, 9 கஜம் புடவையுடன் , பூஜைக்கு சென்று இருகிறார்கள்.. அங்கு ஆயுத்ஷேமம் முடிந்தவுடன், அந்த தீர்த்த குடங்களுடன் அவர்கள் வீட்டில் இருந்து காரில் கலவை செல்ல அவர்கள் திட்டம்.

அன்றைக்கு பூஜைக்கு வர வேண்டிய அவர்கள் வீட்டு பெண் தீடிர் காரணத்தால் வர முடியவில்லை, பூஜை முடிந்தவுடன், தீர்த்த குடம் எடுத்து செல்ல ஒருவர் வேண்டும், அவர்கள் வீட்டு/மாமி, சுற்றி பார்க்க, என் அம்மா, 9 கஜம் புடவையுடன், சுத்தமாக, எதுவும் சாப்பிடாமல் பெரியவா படம் முன்பு நிற்பதை பார்த்து--

எங்காத்து பெண் இடத்தில் நீங்கள் அந்த 'தீர்த்தம் குடம் எடுத்து' காரில் பெரியவாவை தரிசிக்க வாருங்கள் என கூப்பிட்டு இருகிறார்கள்.

இதை என்ன என்று சொல்ல..

எங்க அம்மாள் மனதார வேண்டினார், காரில் அழைத்து தரிசனம் கொடுத்தார் அந்த மகான்......

No comments:

Post a Comment