Thursday, July 2, 2020

அனாமிகா

அனாமிகா
- மனதை தொட்டுவிடும் கதைகள் (10)  #ganeshamarkalam

அம்புஜம், 38 வயது, மணமாகாதவள். இந்த காலத்துலே இது பெரிய மேட்டர் இல்லை, அவள் கல்யாணம் பண்ணிக்காம இருந்துடலாம்னு முடிவு பண்ணியிருக்கலாம். அனால் அவளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை. தான் பாக்கிறத்துக்கு அழகா இல்லையேன்னு.

5அடி, 4 அங்குலம், கட்டையான தேகம், நிறம் கருப்பு, கீழ்ப்பல் கொஞ்சமா கோணல் ஆங்கிலம் பேச தெரியாது. அவள் படிச்சதெல்லாம் கவர்மேன்ட் ஸ்கூலில் தமிழ் மீடியம். காலேஜ்லே புஸ்தகத்தை வச்சுண்டு ரொம்ப கஷ்டப்பட்டா. கடவுளுக்கும் அவர் ப்ரொஃபேஸருக்கும் மட்டும்தான் தெரியும் அவ எகனாமிக்ஸ்லெ எப்படி பட்டம் வாங்கினான்னு. இந்தியன் வங்கிலே வேலையிருந்தாலும் அவ சமூக வாழ்க்கை நிலைகுலைந்து கிடக்கு. அப்படி ஒரு வாழ்க்கை ஆரம்பிக்கலேன்னுதான் சொல்லணும்
இருக்கிர சில நண்பிகளும் மத்தியான சாப்பாட்டுக்குதான் இவளை பார்க்க வருவா. வாரக்கடைஸீன்னா தனியா ரூமுக்குள்ளேயே. கூட்டம் அலை மோதுர பஸ்ஸுலே கூட யாரும் அவ மேல உரஸமாட்டா. அவளை பெத்தவா அவளுக்கு எவ்வளவோ முயற்சி பண்ணியும் வரன் கிடைக்கலன்னுட்டு, ஜாதகத்துலே ஏதொ கோளாருன்னு விட்டுட்டா. அவளே தெடிண்டு சமாளிச்சுடுவான்னு ஒரு நம்பிக்கையோட.

40 வயஸு தாண்டறத்துக்குள்ள இதுக்கு ஏதாவது பண்ணிடணும்னு அம்புஜம் முடிவுக்கு வந்தா. “அனாமிகா”ங்கிர பேரில் FBலே ஒரு அக்கௌன்ட் ஓபன் பண்ணினா. அதில் பழங்காலத்து தெலுங்கு சினிமா நடிகையோட 35 வயசு ஃபோடோவை, இந்த நடிகையை யாருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னு போட்டாச்சு. ரெண்டே நாள்லெ 25 பிரெண்ட் ரெகுவஸ்ட். அதுலே அஞ்சை ஒத்துண்டாச்சு. ராஜேஷ் தான் அவளுக்கு பொருத்தமா இருப்பான்.

ராஜேஷ் நல்ல உயரம், ரொம்ப அழகா, கோதுமை நிறம். 43, அனால் கல்யாணம் ஆகலை, அண்ணா யுனிவர்ஸிடிலே உடற்பயிர்சியாளராம். 11ஆவது பிரெண்ட் ரெகுவஸ்ட் இவனோடது. 11 இவளோட லக்கி நம்பர். அவன் நிறைய ஃபோடோ அனுப்பியிருந்தான். அதோட இவள் நேரம் சிலவிட ஆரம்பித்தாள். அந்த போடோ தூங்கப்போரச்சே அவளை என்னென்னமோ செஞ்சது. ராஜேஷ் சாட் செஞ்சப்போ ரொம்ப அமரிக்கையா, பணிவா இவள் சௌந்தர்யத்தை புகழ்ந்தான், நம்பளை சேத்துவச்சது வெங்கடேச பெருமாளாதான் இருக்கும்னு வியந்தான். அவன் வீடியோ சாட்டுக்கு வரியான்னு கேட்டப்போ இவ இப்போ வேணாம், என் பக்கத்துலே அம்மா படுத்திண்டிருக்கா, நான் உங்களோட பேஸரது தேரிஞ்சா கோவிச்சுப்பா அப்படின்னுட்டா. இவ அப்பிடி சொன்னது அவனுக்கு அவ மேல இன்னும் வாஞ்சயை அதிகப்படுத்திடுத்து.

இப்போல்லாம் மணிக்கொருதடவை சாட் பண்ரா. காதல், முத்தம், கட்டி அணைச்சுக்கறது இத்யாதி விஷயங்களுக்கெல்லாம் இவா கோட் வோர்ட் வச்சுண்டுருக்கா. இந்த வாட்ஸப் என்க்ரிப்ஷனையெல்லாம் நம்ப முடியாது.

ரொம்ப சீக்கிரமே அவா ஒரு தனி உலகத்தில் மாய கல்யாண வாழ்க்கை ஆரம்பிச்சாசு. ராஜேஷுக்கு ஒரு பையன் ஒரு பெண் குழந்தை வேணுமாம். இவளுக்கோ பையன்கள் மட்டும். இவ மாதிரியே இவ போண்ணூம் பொறந்துட்டா, அதன் கஷ்டம் இவளுக்குத்தான் புரியும். அவளுக்கு கூட்டு குடும்பம், ராஜேஷின் பெற்றோர்களுடன் இருப்பது பிடிக்கும்னு சொல்லிட்டா, அவனுக்கு இதில் அவ்வளவு ஈடுபாடில்லை. ரெண்டுபேரோட பிறந்த நாட்கள், FBஇல் மீட் பண்ணின நாள்னு எல்லாத்தையும் கொண்டாட அரம்பிச்சு, அதுக்கு ஒருத்தருகொருத்தர் அட்ரெஸ் கொடுத்துகாமையே பரிசு அனுப்பிச்சுண்டு. 

அனாமிகா ஒருநாளைக்கு, போறும் அவனை மீட்பண்ணி உண்மையை சொல்லிடணும்னு தீர்மானிச்சா. தனக்கு கணவனா வரபோரவனிடம் இன்னும் உண்மையை மறைக்க மனசு வரலை. ரஜேஷ் பாவம். உண்மையான அம்புஜம் வெளியே வரட்டும்.

சந்தொஷத்துல திக்கு முக்காடிப்போன ராஜேஷ் அவளை தாம்பரம் ஸ்டேஷனில் மீட் பண்ண வரேன்னு உடனே ஒத்துக்கிரான். சனிக்கிழமை 3 மணிக்கு பாங்க்லே பெர்மிஷன் போட்டுண்டு அவ செங்கல்பட்டுலேந்து டிரைன்லெ வந்துடுவாளாம். ஃபாஸ்ட் லோகல் நிக்கிற ப்ளாட்பாரத்தில் மீட் பண்ணலாம்னு. அப்புரம் சங்கீதாவுலே சாபிடலாம்னு அவ ஐடீயா. ஏனொ தெரியலை பில்லை ரெண்டுபேறும் பகிர்ந்துக்கலாம்னு சொல்லிட்டா. அப்படின்னாத்தான் வருவேன்னு அவ சொன்னதாலே இவனும் ஒத்துண்டுட்டான். நான் உன் ப்ரொஃபைல்லெ இருக்கிர படத்தைவச்சு உன்னை கண்டுபிடிச்சுடுவேன்னு அவன் சொல்ரான். அதுக்கு இவ விளையாட்டா – எல்லாம் நிஜ வாழ்க்கையில் அதே மாதிரி இருக்காதுன்னு சொல்லிட்டு – தான் வரும்போது இந்த வார ஆனந்த விகடன் கையில் வச்சிருப்பேன்னு சொல்ரா.

சொன்னபடி ரயில்லேருந்து இரங்கரச்சேயே பென்ச்லே ராஜெஷ் உட்கார்ந்திருக்கான். கரெக்டா லேடீஸ் கம்பார்ட்மென்ட் வந்து நிக்கிர இடத்துக்கு நேரா. ராஜேஷ் அவன் போடோவில் பார்த்ததைவிட ஒரு மடங்கு இன்னும் அழகா அங்கேயும் இங்கேயும் இவளை தன் கண்களால் தேடிண்டு. இவளுக்கு இருதய துடிப்பு நின்னுபோய் திரும்பவும் வரது. ஆனால் இவன்கிட்ட போய் நான்தான் அனாமிகான்னு எப்படி சொல்றது? தயங்கிண்டு மெல்ல போய் அவன் இருக்கிர பென்ச்லேயே இவளும் உட்கார்ந்துக்கரா. கொஞ்ச நேரத்துலே வந்த டிரைனும் போயாச்சு, கூட்டமும் கலைஞ்சாச்சு. தேடரதை விட்டுட்டு ரஜெஷ் இன்னொரு வண்டி வர வரைக்கும் பார்க்கலாம்னுட்டு போனை எடுத்து இவளை டயல் பண்ரான். 

இவ போன் அடிக்கரது.

அனாமிகாவுக்கு தூக்கி வாரிப்போடரது. இப்படி ஆகும்னு இவ தயாரா வரலை. தட்டு தடுமாரி போனை எடுக்கிரத்துக்குள்ள ராஜேஷ் பாத்துட்டான். அனாமிகாவை பாத்துட்டு ஸ்தம்பித்துபோயிடரான். அவன்கிட்டே  இருக்கிர போடோவில் இருப்பதும் இந்தப்பொண்ணும் ரொம்ப வித்யாஸம். ரெண்டு பேரும் வினோதமா, பரிதாபமா பாத்துக்கரா. அம்புஜம் எங்கிர அனாமிகாவுக்கோ அப்படியே காத்துலே கரைஞ்சு போயிடமாட்டோமான்னு இருக்கு.

ஆனால், முதல்ல சுதாரிச்சுகிறது ராஜேஷ்தான். அவன் தலையை திருப்பி, நமுட்டு சிரிப்போட பின்னாடி பென்சுலே உட்கார்ந்திருக்கிறவரைப்பார்த்து, “ராமானுஜம் சார், முன்னாடி வாங்கோ, உங்க அனாமிகாவை கண்டுபிடிச்சுட்டேன்”னு சொல்ரான். ஒரு 45 வயது மதிக்கதக்க தலை முக்காவாசி வழுக்கை விழுந்தும் பின்ன மண்டையில் மட்டும் ரெண்டுபக்கத்துலேருந்து இணைய துடிச்சிண்டுருக்கிற மாதிரி கொஞ்சம் முடியோட, கட்டையா, தமிழ்நாடு போலீஸ்காராளை வம்புக்கிழுக்கும் தொந்தியோட ஒருத்தர் முன்னாடி வந்து அனாமிகாவுக்கு கை கொடுக்க யத்தணிக்கிரார்: “ஹாய், நான் ராமானுஜம், உங்களோட FB பிரெண்ட்!”

அதுக்கப்புரமும், அடுத்த ஒரு மாசமும் நிறைய நடந்தது. அது இப்போ வேண்டாம்.

இவா ரெண்டு பேரும் இப்போ சந்தோஷமா கல்யாணம் பண்ணிண்டு இருக்கா. இவாளுக்கு ரெட்டை பெண் குழந்தைகள் அப்படியே அம்புஜத்தை உறிச்சு வச்சாப்புலெ. அவாளும் அவ படிச்ச அதே ஸ்கூலுக்குத்தான் போரா. ராமானுஜம் தன்னோட FB அக்கௌன்ட்டை முடிச்சுண்டுட்டான்.

No comments:

Post a Comment