**ஏற்றமிகு வாழ்வு தரும் குரு கவசம்***
திருமண தடை, வேலை போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் குரு பகவானின் கவசம் ஒன்று உள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்.
ஏற்றமிகு வாழ்வு தரும் குரு கவசம்
மிகவும் அரிதான இந்த கவசத்தை ஒவ்வொரு வியாழக்கிழமையில் காலை 6 முதல் 7 மணி வரை குரு ஹோரை நேரத்தில் பாராயணம் செய்தால் குருபகவானின் பேரருளுக்கு பாத்திரமாகலாம் என்பது நம்பிக்கை.
சீரியன் மனத்துள் வேண்டும்
சித்தி தந்து அளித்துச் செய்யும்
பாரியல் கருமம் கூட்டிப்
பரவுமெய்ஞ் ஞான வாழ்வு
மேரியல் செல்வப் பேறும்
யாவையும் ஒருங்கு நல்கும்
தேரியல் அறிஞன தேவர்
தேசிகன் திருத்தாள் போற்றி
அரும் பிருகற்பதிப் பேர்
ஆண்டகை சென்னி காக்க
வருந்திரு நெற்றி காக்க
வானவர் குரவன் கன்னம்
விரும்பினன் காக்க நாட்டம்
வேண்டுவ தருவோன் காக்க
பருங்குமிழ் பொருவு நாசி
பண்ணவன் அரசன் காக்க
பாட்டு அமர்செவ்வாய் வேத
பாரகன் காக்க துண்டம்
கூட்டு முற்றிவன் காக்க
குலவரைப் புயம் இரண்டும்
வேட்டமர் சுகம் தந்து ஆள்வோன்
விரும்பினன் காக்க செங்கை
வாட்டும் வச்சிரங் கைக்கொள்ளும்
வானவன் வழாது காக்க
பருவரை பொருவு மார்பம்
பயிலுங்கீட் பதி புரக்க
விருதனம் வாக்கு வல்லோன்
என்றும் வந்து எய்திக் காக்க
வருசுகம் நல்கும் நாதன்
வயங்கு எழில் வயிறு காக்க
பொருவரு நீதி வல்லோன்
பொற்புஉறு நாபி காக்க
எங்கும் சென்று அளிக்கும்ஈசன்
எழிற்கடி புரக்க ஊருத்
தங்கு புண்ணியன் புரக்க
சங்கமெய்ஞ் ஞானம் ஈயும்
புங்கவன் புரக்க பாதம்
புகல் உலகெல்லாமாகும்
அங்கணன் புரக்க மேனி
அமர் குருப் புரத்து காக்க
காலையும் உச்சிப் போதும்
கதிரவன் குடபான் மேவு
மாலையும் வானோர் போற்ற
வருகுரு கவசம் என்னும்
நூலை அன்போடு உரைக்கும்
நுண்ணியன் வேட்டாங்கு எய்திச்
சோலைஅம் தரு விண்ணாட்ட
சுரரையும் வெற்றி கொள்ளும்
மறைமிகு கலைநூல் வல்லோன்
வானவர்க்கு அரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன்
நாட்டினுக்கு அதி பனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில்
நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன்
இருமலர்ப் பாதம் போற்றி போற்றி
****குரு கவசம்****
அஸ்ய ஷ்ரீப்ருஹஸ்பதி கவசமஹா மம்த்ரஸ்ய, ஈஷ்வர ருஷிஃ,
அநுஷ்டுப் சம்தஃ, ப்ருஹஸ்பதிர்தேவதா,
கம் பீசம், ஷ்ரீம் ஷக்திஃ, க்லீம் கீலகம்,
ப்ருஹஸ்பதி ப்ரஸாத ஸித்த்யர்தே சபே விநியோகஃ ||
த்யாநம்
அபீஷ்டபலதம் வம்தே ஸர்வஜ்ஞம் ஸுரபூசிதம் |
அக்ஷமாலாதரம் ஷாம்தம் ப்ரணமாமி ப்ருஹஸ்பதிம் ||
அத ப்ருஹஸ்பதி கவசம்
ப்ருஹஸ்பதிஃ ஷிரஃ பாது லலாடம் பாது மே குருஃ |
கர்ணௌ ஸுரகுருஃ பாது நேத்ரே மேபீஷ்டதாயகஃ || 1 ||
சிஹ்வாம் பாது ஸுராசார்யஃ நாஸம் மே வேதபாரகஃ |
முகம் மே பாது ஸர்வஜ்ஞஃ கம்டம் மே தேவதாகுருஃ || 2 ||
புசா வம்கீரஸஃ பாது கரௌ பாது ஷுபப்ரதஃ |
ஸ்தநௌ மே பாது வாகீஷஃ குக்ஷிம் மே ஷுபலக்ஷணஃ || 3 ||
நாபிம் தேவகுருஃ பாது மத்யம் பாது ஸுகப்ரதஃ |
கடிம் பாது சகத்வம்த்யஃ ஊரூ மே பாது வாக்பதிஃ || 4 ||
சாநுசம்கே ஸுராசார்யஃ பாதௌ விஷ்வாத்மகஃ ஸதா |
அந்யாநி யாநி சாம்காநி ரக்ஷேந்மே ஸர்வதோ குருஃ || 5 ||
பலஷ்ருதிஃ
இத்யேதத்கவசம் திவ்யம் த்ரிஸம்த்யம் யஃ படேந்நரஃ |
ஸர்வாந் காமாநவாப்நோதி ஸர்வத்ர விசயீ பவேத் ||
|| இதி ஷ்ரீ ப்ருஹஸ்பதி கவசம்
**சர்வம் கிருஷ்ணார்ப்பணம்**
No comments:
Post a Comment