Saturday, June 20, 2020

ஆஞ்சநேயர் வெண்ணை for skin disease

ஆஞ்சநேயர் வெண்ணை for skin disease

பெரியவாளிடம் ஒரு பக்தர் வந்தார். அவருடைய முகம், எல்லோரையும் ஒரு மாதிரியாகப் பார்க்க வைத்தது. காரணம்? ஏதோ ஒரு வித skin disease அவரைத் தாக்கியதால், முகம் மட்டும் பயங்கர கருப்பாக ஆகியிருந்தது. பாவம். முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா?“பெரியவாதான் எனக்கு ஒரு மருந்து சொல்லணும். வெளில போகவே ரொம்ப கஷ்டமா இருக்கு. போகாம இருக்கவும் முடியாது. எல்லா வைத்யமும் பண்ணிட்டேன்….”மஹா வைத்யநாதம் தீர்க்காத வியாதியா!“ 

ஒங்காத்துப் பக்கத்ல ஆஞ்சநேயர் கோவிலோ, சன்னதியோ இருக்கோ?.”“இருக்கு பெரியவா…பெருமாள் கோவில்ல ஆஞ்சநேயர் சன்னதி இருக்கு”“ரொம்ப நல்லதாப் போச்சு. நீ தெனோமும் அந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாத்தி, அதை வழிச்சு எடுத்துண்டு போயி, ஒன்னோட மூஞ்சி முழுக்க தடவிண்டு கொஞ்ச நேரம் ஊறணும். அப்றம் அதை சோப்பு கீப்பு போட்டு அலம்பாம, ஒரு துணியால நன்னா தொடச்சுக்கோ!…பண்றியா?”“பெரியவா உத்தரவு. கட்டாயம் பண்றேன் 

“கொஞ்ச நாள் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சாற்றிய வெண்ணையை முகத்தில் தடவிக் கொண்டு வந்தார். கொஞ்சங் கொஞ்சமாக
வெண்ணையை துடைத்து எடுக்கும்போது, கூடவே அட்டக் கருப்பும் சேர்ந்து வர ஆரம்பித்து, முகம் பளிச்சென்று ஆகிவிட்டது!

தர்சனத்துக்கு மிகவும் சந்தோஷமாக வந்தார்.“என்ன? த்ருப்தியா? சொஸ்தமாச்சா? எப்டி ஆஞ்சநேய வைத்யம்?..” என்று சிரித்தார்.“ஆஞ்சநேய வைத்யம் இல்லே; ஆச்சார்யாள் வைத்யம்” என்று நன்றியும் சந்தோஷமும் கலந்து கூறினார் பக்தர்.இரண்டுமே சத்யந்தான்! ஒன்றுதானே.

#jaya_jaya_sankara

No comments:

Post a Comment