Monday, March 15, 2021

பொன்னாங்கண்ணி கீரை சாம்பார்

 🥗தகவல்📩 களஞ்சியம் 👩‍🍳

இன்றைய    சமையல் குறிப்பு!

பகிர்வு

பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் செய்வது எப்படி?

சமைக்கத் தேவையானவை:

பொன்னாங்கண்ணி கீரை-1 கட்டு

துவரம் பருப்பு-150g
 தக்காளி-4
 
சாம்பார் தூள் - 2 ஸ்பூன்
 
சின்ன வெங்காயம்-10
 
மஞ்சள் தூள் சிறிதளவு
 
சீரகம் - அரை ஸ்பூன்
 
பெருங்காயத்தூள் -சிறிதளவு
 கடுகு -அரை ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு.
 கருவேப்பிலை ,மல்லி இலை சிறிதளவு
 எண்ணெய் - தேவையான அளவு

 பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் செய்முறை:

Step 1.

முதலில் ஒரு பாத்திரத்தில் பருப்பு , பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சள் தூள் ,தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.

Step 2.

பின்பு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கி அதில் நறுக்கிய கீரையை சேர்த்து தேவையான அளவு தண்ணீரையும், சாம்பார் தூளையும் சேர்த்து வேக விடவும்.

Step 3.

வெந்தவுடன் உப்பு சேர்த்து பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒரு தனி கடாயில் போட்டு தாளித்து அதில் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான பொன்னாங்கண்ணி சாம்பார் ரெடி.

பகிர்வு



​​​​​​​​​​

No comments:

Post a Comment