புளிப்பும், காரமும் கலந்த சுவையான பருப்பு வடை செய்முறை
புளிப்பும், காரமும் நிறைந்த பருப்பு வடை செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வித்தியாசமான இந்த வடை ஒரு முறை செய்து பார்த்தால் மீண்டும்... மீண்டும்... செய்து குடும்பத்தினரை அசத்துவீர்கள்.
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - அரை கப், துவரம்பருப்பு - அரை கப், உளுத்தம்பருப்பு - கால் கப், பச்சரிசி - கால் கப், காய்ந்த மிளகாய் - 8, புளி - சிறிய உருண்டை, பெருங்காயம் - அரை தேக்கரண்டி, தேங்காய் துருவல் - கால் கப், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக ஊறப் போடுங்கள். அதனுடன் மிளகாயையும் சேர்த்து ஊறவிடுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும் புளி, தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்து, ஒரு மேசைக்கரண்டி எண்ணெயைக் காய வைத்து கடுகை தாளித்து கொட்டி கலந்துகொள்ளுங்கள்.
எண்ணெய்யைக் காய வைத்து சிறு சிறு வடைகளாக போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். புளிப்பும் காரமும் சேர்ந்து ருசியாக இருக்கும் இந்த வித்தியாசமான வடை.
No comments:
Post a Comment