காலிஃப்ளவர் குருமா
தேவையான பொருள்கள் காலிஃப்ளவர் - ஒன்று, தக்காளி - 2, பட்டாணி - அரை கப், பட்டர் பீன்ஸ் - அரை கப், மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி, மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி, மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி, உப்பு - சுவைக்கேற்ப, தாளிக்க:, எண்ணெய் - 2 கரண்டி, சீரகம் - ஒரு தேக்கரண்டி, அரைக்க:, பெரிய வெங்காயம் - 2, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 5 பற்கள், முந்திரிப்பருப்பு / பாதாம் பருப்பு - 6
செய்முறை தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.வெங்காயத்தை நறுக்கி, அத்துடன் தோல் சீவிய இஞ்சி, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைக்கவும்.காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு எடுத்து, சுத்தம் செய்து வைக்கவும்.ப்ரஷர் பானில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் தாளித்து, தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கவும்.வதங்கியதும் மிளகாய்த் தூள், மல்லித் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் கிளறவும்.அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவைக் கரைத்து ஊற்றி கலக்கவும்.பிறகு சுத்தம் செய்த காலிஃப்ளவர் துண்டுகள், பட்டாணி மற்றும் பட்டர் பீன்ஸை சேர்த்துக் கிளறவும்.நன்றாகக் கிளறிவிட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து ப்ரஷர் பானை மூடி வெயிட் போடவும்.3 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும்.ஆறியதும் திறந்து வேறு பாத்திரத்தில் மாற்றவும்.சுவையான காலிஃப்ளவர் குருமா தயார்.கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற அருமையான சைட் டிஷ் இது.
No comments:
Post a Comment