ஊர் கதை - ஸ்தல புராணம்
-மஹா பெரியவா. பகுதி - 5
தெய்வத்தின் குரல்.
இப்போது நான் சொன்ன இந்தக் கதையில் அஹம்பாவம் கூடாது, சூதாட்டம் கூடாது, பதியின் வாக்குக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், ஸஹோதர வாத்ஸல்ய பரிபாலனம் முதலான அநேக தர்மங்கள் வெளியாவதால் ஸ்தல புராணங்களை உபயோகமில்லாதவை என்று ஒதுக்குவது எவ்வளவு தப்பு என்று தெரிகிறது. அது மட்டுமில்லை. நான் கதை சொன்னதும் இதை நினைத்து இல்லை. இந்த ஒரு கதைக்குள்ளே துண்டு துண்டாக ஒரு ஏழெட்டு ஸ்தல புராணங்கள் சேர்ந்திருக்கின்றன. ஒன்றுவிட்ட இடத்தில் இன்னொன்று ஆரம்பிக்கிறது. எல்லாம் சேர்ந்தால்தான் கதை பூர்ண ரூபம் பெறுகிறது.
தேரழுந்தூர், பில்லூர், ஆனாங்கூர், திருக்குளம்பியம், திருவாவடுதுறை, குற்றாலம், எதிர்கொள்பாடி, வேள்விக்குடி, குறுமுளைப்பாலி, திருமணஞ்சேரி என்று இத்தனை ஊர்களைப் பற்றிய ஸ்தல புராணங்கள் ஒன்று சேர்ந்து ஒரே கதையை உருவாக்கியிருப்பதால் அந்தக் கதை நிஜந்தான் என்று ஆகிறது. அநேகமாக அந்த ஸ்தலங்களின் பேரிலேயே ‘எவிடென்ஸ்’ இருக்கிறது.
இதைவிடத் தஞ்சாவூர் ஜில்லாக்காரர்களுக்கு அதிகம் தெரிந்த ஒரு கதை கும்பகோணத்தையும் அதன் சுற்றுப்பட்ட க்ஷேத்ரங்களையும் இணைக்கிறது:
தொடரும் .... 🙏
No comments:
Post a Comment