Wednesday, June 3, 2020

பழைய சாதம்

பழைய சாதம் –“இவ்வ்வளவு” விஷயமா?

காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள்? அமெரிக்க ஊட்டசத்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

காலை உணவுக்கு பழையசோறு (கஞ்சி) சாப்பிடுவது உடல்ஆரோக்கியத்திற்கு பலவகைகளிலும் நல்லது என்பதுஅமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இரவு சாப்பாடு முடிந்துஎஞ்சியுள்ள சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்துவிடுவார்கள்.

மறுநாள் காலையில் சற்றுபுளித்த சுவையுடன் நுரைதள்ளிய நிலையில் பழைய சோறுதயாராகிவிடும். பழைய சோறுதண்ணீரில் சிறிது உப்புபோட்டுக் குடிப்பதை வீட்டில்உள்ள பெரியவர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். உடல்சூட்டை தணித்துவிடும் ஆற்றல் இந்த தண்ணீருக்கு உண்டு.கால மாற்றம், நாகரீகம்ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் பழைய சோறு இருந்த இடத்தை இப்போது இட்லி,தோசை, பூரி, சப்பாத்தி, நூடுல்ஸ்போன்ற உணவுகள்ஆக்கிரமித்துவிட்டன.கிட்டத்தட்ட அனைத்துவீடுகளிலும் இப்போது எல்லாம் இரவு கூட டிபன்தான். எனவே,மறுநாள் காலையில் பழையசோறு சாப்பிடுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில், பழையசோறு என்றும், கஞ்சி என்றும் நாமெல்லாம் உதாசீதனப்படுத்திய அந்த மகத்தான உணவின்மகத்துவத்தையும், பல்வேறுவிதமான பயன்பாடுகளையும்அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு மூலம்கண்டுபிடித்துள்ளனர்.

தென்னிந்தியர்கள் காலை உணவாக பயன்படுத்தும்பழைய சோற்றில் உடல்ஆரோக்கியத்திற்கு தேவையான இவ்வளவு சத்துகள்அடங்கி உள்ளனவா? என்றுவியந்து போனார்கள். அவர்களின் ஆய்வில் தெரிய வந்தவிவரங்கள் வருமாறு:பழைய சோறு, காலைஉணவுக்கு மிகவும் பொருத்தமான உணவு ஆகும்.

மற்றஉணவு பதார்த்தங்களில் இல்லாத வகையில் பழையசோற்றில் அரிய வைட்டமின்களான பி6, பி12 ஆகியவைமிகுதியாக காணப்படுகிறது.பழைய சோற்றில் உருவாகும்கோடிக்கணக்கான நல்லதன்மை கொண்ட பாக்டீரியாக்கள் உணவு செரிமானத்திற்குபெரிதும் உதவும். அதில் நோய்எதிர்ப்பு மற்றும் நோய்தடுப்புக்கான காரணீகள் ஏராளமாக உள்ளன.கஞ்சி சாப்பிடுவதால் சிறு குடலில் உருவாகும் பாக்டீரியாக்கள் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பதுடன்அவற்றை நோய் உண்டாக்கும்கிருமி களை எதிர்க்கும்வகையில் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கின்றன.காலை உணவாக சாப்பிடும்பழைய கஞ்சி எளிதில் ஜீரணமாகிவிடும். அது வயது முதிர்ந்த தோற்றத்தையும், எலும்புசம்பந்தப்பட்ட நோய்களையும் நீக்கும். ஜீரணம் தொடர்பானஎந்த பிரச்சினையும் வராது. சூடுதணிந்து உடம்பு குளிர்ச்சி யாக இருக்கும். பழைய சோறு நார்ச்சத்து கொண்டதாக இருப்பதால் மலச்சிக்கல்பறந்துவிடும். மந்தநிலை போய்உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் பழையசோறுக்கு உண்டு. உடலில்சோர்வே ஏற்படாது.

பழைய சோறு சாப்பிட்டால் அன்றைய நாள்முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். சோர்வு அண்டாது.அனைத்து விதமான ஒவ்வாமைகளும், தோல் சம்பந்தப்பட்டநோய்களும் காணாமல்போய்விடும். எந்தவித அல்சரும் நெருங்காது. உடல் இளமையாகவும், தோற்றப்பொலிவுடனும் இருக்கும்.மேற்கண்ட தகவல்களைஅமெரிக்க விஞ்ஞானிகள்தங்கள் ஆய்வில் கண்டறிந் துள்ளனர். மண்பானையில்தண்ணீர் ஊற்றி செய்யப்படும்பழைய சோறு இன்னும் அதிகசுவையுடன் மணம் கொண்டதாக இருக்கும். இன்றும்கிராமப்புறங்களில் கல் சட்டிஎன்று சொல்லப்படும் மண்பானையில்தான் பழைய சோறுபோட்டுவைப்பார்கள்.பல வீடுகளில் தலைமுறைதலைமுறையாக பயன்படுத்தப்பட்டு வரும் கல்சட்டிகள்கூட இருக்கத்தான் செய்கின்றன.

பழைய சோறுக்கு சம்பாஅரிசிதான் மிகவும் ஏற்றதுஆகும். காரணம், அதில்ஏராளமான ஊட்டச்சத்துகளும்தாதுபொருட்களும் அடங்கிஉள்ளன.எப்போதுமே நம்மவர்கள்சொல்வதை நம்பாமல் வெளி நாட்டினர் கூறுவதை அப்படியேவேதவாக்காக கருதுவது நமதுவழக்கம். இப்போது வெளிநாட்டுவிஞ்ஞானிகளே பழையசோற்றின் மகத்து வத்தைசொல்லிவிட்டார்கள்.

இனிமேலும் என்ன யோசனை?

இன்றைய நாகரீக உணவுகளுக்கு விடை கொடுத்துவிட்டு முன்பு இருந்ததைப் போலகாலை உணவுக்கு பழைய சோறு சாப்பிடுவோம். உடல் நலனைபாதுகாப்போம்.

--------------------------------------------------------------------------------

பழைய சோறு- அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவா க பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்போது கிராமங்களில்கூட காண முடிவதி ல்லை. (ஆனால் இன்று நட்சத்திர ஹோட்டல்களில் மெனு கார்டில் முதலிடம் பழைய சோறு காரணம் கீழே முழுவதும் படிங்க..)

பழைய சோறு- அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழையசோறு சாப்பிடுவது வழக்க ம். அந்த வழக்கம் தற்போது கிராம ங்களில்கூட காண முடிவதில்லை. நாம் சிறுவயதில் சாப்பிட்டி ருப்போம்.

இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப் படுகிறது. பிச்சைக்காரன்கூட வாங்க மாட்டேன் என்கிறான். அப்படித்தான் எங்கள் வீட்டில் ஒருநாள் மதிய உணவை முடித்துவிட்டு மீதம் இருந்த சாதத்திற்க்கு தண்ணிர் உற்றி வைத்துவிட்டோம், சிறி து நேரத்தில் ஒருவர் தனக்கு பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடுங்கள் என கேட்க எங்க அம்மா அவரிடம் இப்போ தான் தண் ணிர் ஊற்றினேன் குழம்பு ஊற்றி கொண்டு வரவா அல்லது தண்ணிரோடு சாப்பிடுகிறீர்களா என கேட்க தண்ணி ஊத்தியாச்சா நான் பழைய சோறு சாப்பிட மாட்டேன் எனக்கு வேண்டாம் எனக்கூற, இப்போதான் ஊற்றினேன் பழையசோறு இல்ல என எடுத்து கூறியும் அவர் எனக்கு வேண்டாம் என நடையை கட்டிவிட்டார்.

அப்போதே அப்படி என்றால் இக்காலத்தில் சொல்ல வே வேண்டாம். பழைய சோறு என்றாலே காத தூரம் ஓடுகிறோம். ஆனால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கி றதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருகி றதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகி விடும்.

காலையில் கழிவறையில் மல்லு கட்ட வேண்டாம்.
இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமி தமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைகிறதாம். காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது பன்றி காய்ச்சல் உட்பட. காலை உணவாக பழைய சாதத்தை உண்டால் உடல் லேசா கவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் . இரவிலே தன்னிர் ஊற்றி வைப் பதால் லட்சக்கணக் கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன் றவற்றை குணப்படுதும். அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் இல்லாமல் காலையில் ஃபிரியா போலாம். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறந்துவிட்டதாக அமெரிக்காவில் வசிக் கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் கூறுகிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகி விடுகிறது.

அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குண்மாகி விடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராம்ல் உடல் ஆரோக்கியமாகவும் இளமை யாகவும் இருக்கும். அதனாலதான் நம்ம ஆளுங்க ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்யமுடிந்திருகிறது போலும். காலையில் சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என கழித்து திரியும் தமிழ் மக்களே இன்றிலிருந்து பழைய சோறு சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம். அப்புறம் பழைய

சாதம் செய்ய தெரியுமா?
(என்ன கொடுமை சார் இது எதுக்கெல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியாத இருக்கு)

பொங்குன சோத்துல தண்னிய ஊத்திட்டு அடுத்த நாள் காலைல திறந்து பாருங்க கமகம என பழைய சோறு தயார். இதற்கு கை குத்தல் அரிசி சிறந்தது. நம்ம வீட்டல் போய் கை குத்தல் அரிசியில் சோறு பொங்க சொன்னால் நம்க்கு தான் குத்து கிடைக்கும் என அஞ்சுபவர்கள் ஒரு ரூபாய் அரிசிகூட உபயோக்கலாம். சூடான சாததில் தண்னிர் ஊற்ற கூடாது. ஆறிய பின்பு மண்சட்டியில் போட்டு தண்னிர் ஊற்றி மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்று இருக்கும். மதியம் வரை பசிக்காதாம்.]

No comments:

Post a Comment