அருமையான செய்யுள்😂👍🤘
"வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன! இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத சீரகத்தை தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்டியாரே"
எவ்வளவு சரக்குடன் ஒரு அருமையான பாடலில் பலசரக்கை வைத்து வாழ்க்கை தத்துவத்தை சொல்லிவிட்டார்
வெங்காயம் ---- (வெண்+காயம்) வெண்மையான உடல்
சுக்கானால் ----- சுக்காக சுருங்கி போனால்
(இஞ்சி காய்ந்தால் சுக்கு)
வெந்தயம் ------ வெம்மையான நெருப்பிலே வேகக்கூடிய உடலால்
ஆவதென்ன - ஆவது ஒன்றுமில்லை
இங்கார் - - - - - - (இங்கு + ஆர்) இப்பூலகில் யார்
சுமந்திருப்பார் இச்சரக்கை --- அவ்வுடலை வைத்துக்கொண்டிருப்பார்
மங்காத ---- குறைவில்லாத
சீரகம் --- வைகுந்தம்
(சீரகம் - சீர்+அகம் (ஸ்ரீ அகம்) - - - அனைவருக்கும் தாயான மஹாலஷ்மி தாயாரது சீர்மிகு பெரு வீடு)
தந்தீரேல் ---- நீ கொடுத்துவிட்டால்
ஏரகத்து - - - (ஏர் +அகம்)
உயர்ந்த உலகமான வைகுந்தத்தில் தரிசனம் தரும்
செட்டியாரே! -- அனைத்து (சரக்குகளுக்கும்) செல்வங்களுக்கும் உரியவரான பெருமாளே!
தேடேன் பெருங்காயம்--- இன்னொரு உடலை நான் தேடமாட்டேன்
Super sir. Is it by Kalamega pulavar? or some other pulavar?
ReplyDelete