முக்திநாத்.
ஸ்ரீதேவி ஸமேத ஸ்ரீமூர்த்தி திருக்கோவில் {முக்திநாத் / சாளக்கிராம திவ்யதேசம்} நேபாள நாட்டின், மஸ்தங் பகுதியில் 3500 மீட்டர் உயரமான மலைச்சிகரத்தில் அமைந்துள்ளது.
108 வைணவ திவ்ய தேசங்களில் பாரதத்திற்கு வெளியில் இருப்பது இந்த ஒரு கோவில் தான்.
முக்திநாத் (Muktinath), நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும்.
வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் 105வது திவ்ய தேசமாகும். திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர். ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாகும்.
முக்திநாத்தில் பாயும் கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை, வைணவர்கள் நாரயாணனின் அம்சமாக கருதி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள்.
முக்திநாத் இருப்பிடத்தை 51 சக்தி பீடங்களில் ஒன்றாக சாக்தர்கள் கருதுகின்றனர். திபெத்திய பௌத்தர்கள் முக்திநாத்தை நூறு புனித நீர் நிலைகள் எனப் போற்று வழிபடுகிறார்கள். தாந்திரீக திபெத்திய பௌத்தர்கள், முக்திநாத்தில் உள்ள டாகினி என்ற பெண் தெய்வத்தின் இருப்பிடமாக கருதுகின்றனர்.
பயண காலம் & வழி
ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாதரை தர்சனம் செய்ய ஏற்ற காலமாகும். கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது. எனவே முதலில் காட்மாண்டிலிருந்து, பொக்காராவை அடைந்து, அங்கிருந்து வான் வழியாக ஹெலிகாப்டர் அல்லது சிற்றுந்து மூலம் முக்திநாதரை தரிசிக்கலாம். பொக்காராவிலிருந்து முக்திநாத் செல்லும் வழியில் ராணிபௌவா, ஜோர்கோட், ஜார்கோட், சோங்கூர், காக்பெனி அல்லது ஜோம்சோம் ஆகிய இடங்களில் தங்க வசதியுள்ளது. சிற்றுந்து மூலம் காத்மாண்டிலிருந்து 377 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்திநாத் கோயிலை அடைய 10 மணி நேரமாகும். காத்மாண்டிலிருந்து வான் வழியாக 194 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
உயரமான இமய மலைத்தொடர்களைக் கொண்ட நேபாள நாட்டின், மஸ்தங் பகுதியில் 3500 மீட்டர் உயரமான மலைச்சிகரத்தில் அமைந்துள்ளது இந்த முக்திநாத் கோவில். முற்காலத்தில் இந்த முக்திநாத் கோவில் “சாளக்கிராம ஷேத்திரம்” என அழைக்கப்பட்டது. ஏனெனில் இந்த முக்திநாத் கோவிலுக்கு சற்று தொலைவில் ஓடும் “கண்டகி ஆற்றில்” இயற்கையாக நிறைந்திருக்கும் சாளக்கிராம கற்கள் கிடக்கின்ற காரணத்தால் தான். இந்த சாளக்ராம கற்கள் விஷ்ணுவின் அம்சம் கொண்டதாக வைணவர்களால் போற்றப்படுகிறது.”108 வைணவ திவ்ய தேசங்களில்” இது “106” ஆறாவது திவ்ய தேசமாக கருத படுகிறது. மற்றும் வைணவர்கள் புனிதமாக கருதும் ஏழு புண்ணிய வைணவ கோவில்களில் இதுவும் ஒரு முக்கிய கோவிலாக கருதப்படுகிறது. 108 வைணவ திவ்ய தேசங்களில் பாரதத்திற்கு வெளியில் இருப்பது இந்த ஒரு கோவில் தான். ஆழ்வர்களில் திருமங்கை ஆழ்வார் இந்த முக்திநாத் கோவிலுக்கு வரும் முயற்சியில் ஈடுபட்டு, அது முடியாமல் போனதால் இக்கோவில் இருக்கும் ஊருக்கு சற்று அருகில் இருந்த வாறே இந்த முக்திநாதரின் தரிசனம் பெற்று மங்களாசாசனம் பாடி அருளினார் திருமங்கை ஆழ்வார். இக்கோவிலில் இருக்கும் முக்திநாதரின் சிலை ஒரு மனிதனின் உயரத்தில் இருக்கிறது. மேலும் இந்த சிலையின் பெரும்பாலான பகுதி தூய தங்கத்தால் செய்ய பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் சுற்று சுவரில் 108 பசுமாட்டின் தலை கொண்ட சிலைகளின் வாயிலிருந்து தீர்த்தம் கொட்டுகின்றன. இதில் குளித்து முக்திநாதரை வழிபட்டால் அவருக்கு முக்தி கிட்டும் என்பது வைணவர்களின் நம்பிக்கை.
No comments:
Post a Comment