ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் -05
09) முடிகொண்டான் ராமர் கோயில்...
★முடிகொண்டான் ராமர் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராமர் கோயிலாகும். பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தக்
கோயில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில், மகுடவர்தனபுரம் எனும் முடிகொண்டானில் உள்ளது.
★ராமரின் வருகையைப்பற்றி பரதரிடம் சொல்வதற்காக ஆஞ்சநேயர் சென்றுவிட்ட காரணத்தால் இங்கு மூலவராக ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் மட்டும் உள்ளனர்.அருள்மிகு ராமர் கோதண்டராமராக கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார் அவருக்கு வலப்புறம் சீதை மற்றும் இடப்புறம் இளவல் லக்ஷ்மணனும் உள்ளனர்.
★புரட்டாசி3வது சனிக்கிழமை உற்சவர் புறப்பாடு-13 நாட்கள் திருவிழா, ஸ்ரீராம நவமி உற்சவம்10 நாட்கள் திருவிழா கடைசி நாள் சீதா கல்யாணம் -புறப்பாடு. ஒவ்வொரு மாதமும் ராமரின் ஜென்ம நட்சத்திரமான புனர் பூசம் நட்சத்திரத்தன்று சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.வாரத்தின் சனிக் கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி மற்றும் பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின் போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
★வேறு எங்குமே காண முடியாத வகையில் அனுமன் இல்லாத ராமர் எழுந்தருளி இருக்கும் மூலஸ்தானத்தை இங்கு காணலாம். இங்குள்ள ராமரின் இடது புறம் சீதையும், வலது புறம் லட்சுமணனும் உள்ளனர். ஆஞ்சநேயர் தனி சன்னதியில் உள்ளார்.
★இத்தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானமும் கீர்த்தியும், புகழும் அடைவர்.குறிப்பாக அயல் நாட்டுக் கல்வி படிக்க விரும்புவோர் இத்தலத்தில் வழிபட்டால் அவர்களது பிரார்த்தனை நிறைவேறும் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்கள், பாடத்தில் தேர்ச்சி பெற விரும்புவர்கள், கலைத் தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் பெரும்பாலோர் இத்தலத்தில் வந்து வழிபட்டு தங்கள் கலைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
★பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வழிபட்டு மீண்டும் ஒன்று சேர்கின்றனர் மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் ஸ்ரீராமசந்திர மூர்த்தி தமது பக்தர்களது வேண்டுதல் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
★தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமி புறப்பாடு நடத்துகின்றனர். துளசிமாலை சாத்துதல், விளக்குகள் வாங்கி வைத்தல் ஆகியவற்றையும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக செய்கின்றனர். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம். தவிர வழக்கம் போல அபிஷேகங்களும் ஆராதனைகளும் இங்குச் செய்யலாம். வசதி அதிகம் படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
★14 வருடம் ஸனவாசம் முடியப்போவதால் தமக்காக காத்திருக்கும் தம்பி பரதன் தீக்குளித்து உயிரை மாய்த்து கொள்வான் என்று கருதி அனுமனை அயோத்திக்கு அவசரமாக அனுப்பி தாம் கிளம்பி வந்து கொண்டே இருக்கும் தகவலைத் தெரிவித்துவிட்டு வரும்படி ஸ்ரீராமர் உத்தரவிட்டார். அனுமனும் அயோத்தி சென்று பரதனிடம் ராமர் கூறியவற்றை தெரிவித்துவிட்டு இங்கு திரும்பினார். அப்போது ராமர் தான் வருவதற்கு முன்பே விருந்து சாப்பிட்ட செய்தி அறிந்ததும் ஆசிரமத்திற்குள் வராமல் கோபித்துக் கொண்டு வெளியிலேயே உட்கார்ந்து கொண்டாராம். ராமரும் தனக்கு அளிக்கப்பட்ட விருந்தில் பாதியை அனுமனுக்கு அளித்து சாந்தப்படுத்தினார். அதனால் தான் வேறு எங்குமே காண முடியாத வகையில் அனுமன் இல்லாத ராமர் எழுந்தருளியிருக்கும் மூலஸ்தானம் இங்கு காணலாம். கோபித்துக் கொண்ட அனுமனுக்கு கோயிலுக்கு நேர் எதிரில் தனியாக சன்னதி இருப்பதையும் காணலாம்.
★வால்மீகி ராமயணத்தில் குறிப்பிடப்பட்ட இந்த தலம் பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் அமைந்த தலம். ஸ்ரீராமருக்காக ரங்கநாதரை எழுந்தருளச் செய்த தலம்.
பொதுவாக ராமர் கோயில் தெற்கு நோக்கி அமைந்து இருக்கும். இதற்கு காரணம் ராவண வதத்திற்கு பின் விபீஷணன் ஆட்சி பீடம் அமர்ந்து எப்பொழுதும் ராமரை தரிசித்து கொண்டு இருக்க வேண்டும் என்பதால் அவன் வேண்டுகோளின்படி ராமர் தெற்கு நோக்கி அமைந்திருப்பதாக புராணம் கூறுகிறது. ஆனால் இங்கு கோயில் மூலவரான கோதண்டராமர் பரத்வாஜ முனிவருக்கு முடி சூடி காட்சி கொடுத்ததால் சீதா மற்றும் லட்சுமணனுடன் கிழக்கு முகமாகவும், பரத்வாஜ முனிவர் பிரதிஷ்டை செய்த ரங்கநாதர் தனி சன்னதியில் தெற்கு முகமாகவும் அருள்பாலிக்கிறன்றனர். கோபித்துக்கொண்ட அனுமனுக்கு கோயிலுக்கு எதிரில் தனி சன்னதியும் அதன் பின்னால் கோயில் தீர்த்தக்குளமும் இருக்கிறது. ஆழ்வார்கள் காலத்திற்கு முன்பே உருவான கோயில் இது. கழுத்து இடுப்பு ஆகியன வளைந்து கையில் கோதண்டம் வில் வைத்து மிக அற்புதமான வடிவத்தில் உற்சவ மூர்த்தி எழுந்து அருளியள்ள தலம்.
★ ராவணனை வதம் செய்து விட்டு திரும்புகையில் ராமனது புஷ்ப விமானம் தற்போது கோயில் உள்ள இடமான பரத்வாஜ முனிவரது ஆசிரமத்தில் தரை இறங்கியது. ராமரும் விருந்து உண்ண தயாராகிறார். அப்போது தாம் விருந்து சாப்பிடும் முன் ஸ்ரீரங்க நாதரை பூஜை செய்த பின்பே சாப்பிடுவது வழக்கம் என்று தெரிவிக்க பரத்வாஜ முனிவர் ஸ்ரீரங்கநாதரை பிரதிஷ்டை செய்கிறார். ராமரும் அவரை வழிபட்டுவிட்டு முனிவர் தந்த விருந்தை உண்டார். விருந்து உண்ட ராமர் பரத்வாஜ முனிவருக்கு தன்னுடைய பட்டாபிஷேகத்திற்கு முன்பே முடி(மகுடம்)யுடன் இந்தத் தலத்தில் காட்சி தந்தார். எனவே இங்குள்ள கோதண்ட ராமர் முடிகொண்டான் ராமர் என்றழைக்கப்படுகிறார்.
★காலை 6 மணிமுதல் 11மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
நாளை....................
No comments:
Post a Comment