Monday, April 5, 2021

ஷீரராம லிங்கேஸ்வரர் , திரக்ஷராமர்

 இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான மிகவும் அமைதியான சூழலில் அமைந்த தலம் ஷீரராம லிங்கேஸ்வரர் ஆலயம்,

ஆந்திர மாநிலம்.

===================================

🌺மூலவர்: ஷீரராம லிங்கேஸ்வரர் , திரக்ஷராமர் 
🌺அம்மன் / தாயார் : மாணிக்காம்பாள்
🌺புராண பெயர் : திராக்ஷரோமா 
🌺ஊர் : பாலக்கொல்லு 
🌺மாவட்டம் : கிழக்கு கோதாவரி 
🌺மாநிலம் : ஆந்திர பிரதேசம்
திருவிழா : 
பிரதோஷம் , சிவராத்திரி ,  நவராத்திரி 

ஸ்தலபெருமை : 

இந்தக் கோயிலில் உள்ள லிங்கம் மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாகும் . கிழக்கு கோபுரம் 120 அடி உயரமுள்ளது . 9 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோபுரம் . இதில் உள்ள பழமை வாய்ந்த சிவலிங்கம் திரேதாயுகத்தில் ராமபிரானால் வழிபடப்பட்டது . 

எனவே இதை ராமலிங்கேச்வர சுவாமி என்றும் , க்ஷர ராமேஸ்வர சவாமி என்றும் அழைப்பர் , இந்தக் கோயிலில் ஒரு நாள் முழுவதும் தங்கி ராமலிங்கேச்வரரை வழிபட்டால் , காசியில் ஒரு வருடம் தங்கியதற்கு சமம் . கோயில் பிரகாரம் ஸ்ரீவேலுபதி என்பவரால் 10 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது . 

தல வரலாறு : 

தாரகாசுரனை குமாரசுவாமி கொன்று அவன் தொண்டைப் பகுதியில் கட்டியிருந்த லிங்கத்தை உடைத்தவுடன் அது ஐந்து பகுதிகளாக தெறித்து ஐந்து இடங்களில் விழுந்தது . அப்படி விழுந்த லிங்கங்களில் இதுவும் ஒன்று . சப்த மகரிஷிகளில் ஒருவரான கவுசிக மகரிஷியின் மகன் உபமன்யு இங்கு சிவ வழிபாடு செய்து வந்தான் . 

வழிபாட்டின் ஒரு அம்சமான பால் அபிஷேகத்துக்கு இந்தப் பகுதியில் தேவையான பால் கிடைக்கவில்லை . எனவே உபமன்யு அதற்கும் சிவபெருமானை வேண்டி அவர் தன்கையில் இருந்த திரிசூலத்தால் ஒரு பெரிய பள்ளத்தை தோண்டி, அதில் பாற்கடலில் இருந்து பால் வந்து நிரம்பியது . 

இதனால் உபமன்யுவின் கோரிக்கை மட்டும் நிறைவேறியதோடு மட்டுமில்லாமல் இந்தப் பகுதியில் வசித்து வந்தவர்களுக்கு தங்குதடையின்றி நிரந்தரமாக பால் கிடைக்க வழியேற்பட்டது .

எனவே இந்த ஊர் ஆதியில் பாலகோடா என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் பாலக்கொல்லு என்றழைக்கப்படலாயிற்று . 

 சிறப்பம்சம் : 

அதிசயத்தின் அடிப்படையில் : இங்குள்ள லிங்கம் பளிங்கு கல்லால் ஆனது . இந்த லிங்கத்தின் பின்புறம் மூன்று கோடுகள் உள்ளதாகவும் இதற்கு ஜடாமகுடம் தரித்து அலங்கரிப்பர் என்பதும் சிறப்பு . அம்மனின் சக்திபீடங்களில் இது மாணிக்க பீடமாகும் .

ஸ்தல சிறப்பு : 

இங்குள்ள லிங்கம் பளிங்கு கல்லால் ஆனது . இந்த லிங்கத்தின் பின்புறம் மூன்று கோடுகள் உள்ளதாகவும் இதற்கு ஜடாமகுடம் தரித்து அலங்கரிப்பர் என்பதும் சிறப்பு . அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மாணிக்க சக்தி பீடம் ஆகும் .  

கோவில் நடை திறக்கும் நேரம்:

திறக்கும் நேரம் : காலை 5.30 மணி முதல் 11.30 மணி வரை , மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும் . 

நேர்த்திக்கடன் :

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கும் , அம்மனுக்கும் அபிஷேகம் செய்து , புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர் . 

முகவரி : 

அருள்மிகு ஸீர ராம லிங்கேச்வரசுவாமி திருக்கோயில் பாலக்கொல்லு , கிழக்கு கோதாவரி மாவட்டம் ஆந்திரப்பிரதேசம் . 

பொது தகவல் : 

கர்ப்பகிரகத்தில் கறுப்பு கற்களாலான 27 தூண்கள் உள்ளன . மூலவரான ராமலிங்கேச்வர சுவாமிக்கு இடப்புறம் தனித்தனி சன்னதியில் கோதர்னேச்வரரும் , விக்னேச்வரரும் அருள்பாலிக்கின்றனர் . மூலவருக்கு வலப்புறம் தனித்தனி சன்னதியில் சுப்ரமணிய சுவாமியும் , ஜனார்த்தன சுவாமியும் உள்ளனர் . 

கர்ப்பகிரகத்தின் நான்குபுறமும் உள்ள நான்கு ஜன்னல்கள் மூலம் மூலவரைக் காணலாம் . மேலும் பார்வதி , லட்சுமி , நாரேச்வரலிங்கம் , துண்டி விநாயகர் , வீரபத்ரர் , சப்தமாதர்கள் , கனக துர்கா , பிரம்மா , சரஸ்வதி , குமாரசுவாமி , மகிஷாசுரமர்த்தினி , நடராஜர் , தத்தாத்ரேயர் , காலபைரவர் , சனீஸ்வரர் , ராதா கிருஷ்ணர் ஆகியோரையும் தரிசனம் செய்யலாம் . பிரார்த்தனை பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள சிவனை வழிபாடு செய்கின்றனர் .

🙏🏻 திருச்சிற்றம்பலம் 🙏🏻

No comments:

Post a Comment