Thursday, March 6, 2025

30 வகை கல்யாண சமையல்

 30 வகை கல்யாண சமையல்

🙉🙈🙊🙉🙈🙊🙉🙈🙊🙉🙈🙊

விதம்விதமான சுவை, மணம், நிறம் கொண்டு... வயிற்றையும் மனதையும் ஒருசேர நிறைவடைய செய்வதில் கல்யாண விருந்துக்கு ஈடு இல்லை. இந்த இ¬ணைப்பிதழில் 30 வகை கல்யாண சமையல்' ரெசிபிகளை வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.h கல்யாண விருந்தை உங்கள் வீட்டிலேயே செய்து ஜமாய்க்க உதவும் வகையில், அங்கு பாரிமாறப்படும் அயிட்டங்களை அலசி, ஆரய்ந்து அளித்திருக்கிறேன். கல்யாண மண்டபம் போல உங்கள் வீட்டிலும் மகிழ்ச்சி களைகட்டட்டும்! என்று உற்சாகமாக வாழ்த்தும் பத்மாவின் ரெசிபிகளை, கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.

 அசோகா

தேவையானவை: பாசிப்பருப்பு - 200 கிராம், கோதுமை மாவு - 200 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை - 400 கிராம், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி - 10.

செய்முறை: பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, அரை மணி நேரம் ஊற வைத்து வேகவிட்டு, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கோதுமை மாவை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, சர்க்கரை நனையும் அளவுக்கு தண்ணீர் விட்டு  கொதிக்கவிடவும். கம்பிப் பாகு பதம் வந்ததும் அரைத்த பாசிப்பருப்பு, வறுத்த கோதுமை மாவு இரண்டையும் கலந்து, சர்க்கரைப் பாகில் சேர்த்துக் கிளறவும். கிளறும்போது நெய், கேசரி பவுடர் சேர்க்கவும். அல்வா பதம் போல கெட்டி யானதும், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.

போண்டா

தேவையானவை: கடலை மாவு - 250 கிராம், உருளைக்கிழங்கு - 250 கிராம், சிறிய பச்சை மிளகாய் - 2, பெரிய வெங்காயம் - 2, இஞ்சி -  ஒரு சிறிய துண்டு, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு

செய்முறை: உரு ளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கி எடுக்கவும். இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து, உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்து, சூ டான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன்.

மனோகர பருப்பு தேங்காய்

தேவையானவை: அரிசி மாவு - கால் கிலோ, பாகு வெல்லம் - கால் கிலோ, வறுத்து, அரைத்து, சலித்த உளுத்தம்பருப்பு மாவு - 2 டீஸ்பூன்,  எண்ணெய் - அரை லிட்டர், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: அரிசி மாவில் முறுக்குமாவு பதத்துக்கு தேவையான தண்ணீர் விட்டு, உளுந்தமாவு சேர்த்துப் பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதுதான் மனோகரம். வெல்லத்தை உடைத்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, கெட்டிப் பாகாக காய்ச்சவும். (ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு  வெல்லப்பாகை சிறிது ஊற் றி கையில் திரட்டினால்... உருண்டு  வரும். இதுதான் சரியான பதம்). பாகை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி, செய்து வைத்திருக்கும் மனோகரத்தை சிறு துண்டுகளாக உடைத்துப் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், இதற்கென பிரத்யேகமாக இருக்கும் பருப்பு தேங்காய் கூட்டில் உள்புறம் சிறிது நெய் தடவி மனோகரத்தை நிரப்பவும். பிறகு, கூட்டை அகற்றினால், கூம்பு வடிவில் அழகாக இருக்கும் மனோகர பருப்பு தேங்காய்.

குறிப்பு: பருப்பு தேங்காய் கூட்டினை கலர் பேப்பரால் அலங்கரித்தால் மிகவும் அழகாக இருக்கும். கூட்டின் உள்புறம் நெய் தடவி இருப்பதால் எளிதாக எடுக்க முடியும். உப்பு சேர்க்க வேண்டாம். பெயர்தான் பருப்பு தேங்காய்... ஆனால், தேங்காய் சேர்க்கத் தேவையில்லை.

ரவா கிச்சடி

தேவையானவை: ரவை - 250 கிராம், பச ்சைப் பட்டாணி (தோல் உரித்தது) - ஒரு கப், கேரட் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, நெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுக்கவும். கேரட்டை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கேரட்டை நெய்யில் வதக்கி, மஞ்சள்தூள் சேர்த்து, ரவையுடன் கலக்கவும். ஒரு வாணலியில் ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தேவையான உப்பு சேர்த்து, ரவை - காய்கறிகள் கலவையை சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வறுத்த முந்திரிப்பருப்பு தூவவும்.

தேங்காய் சாதம்

தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், நன்கு முற்றிய தேங்காய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, வறுத்த முந்திரி - 10, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசுமதி அரிசியில், ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் பொட்டுக்கடலை தாளித்து, தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வறுத்து, சாதத்துடன் சேர்த்து, உப்பு போட்டு கலக்கவும். கறிவேப்பிலை நறுக்கிப் போட்டு, வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: முந்திரிக்குப் பதில் வறுத்த வேர்க்கடலையும் சேர்க்கலாம்.

கீரை வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு - 250 கிராம், பொடியாக நறுக்கிய முளைக்கீரை - இரண்டு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடிகட்டி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். கீரையை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இதே முறையில் காய்களை நறுக்கி சேர்த்தும் வடை தயாரிக்கலாம். இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன்.

பூந்தி தயிர்வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு - 200 கிராம், கராபூந்தி - 100 கிராம், தயிர் (புளிக்காதது) - 250 மில்லி, கேரட் துருவல் - 4 டீஸ்பூன்,  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி -  சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வை த்து, களைந்து தண்ணீரை வடிகட்டி... பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். தண்ணீரை லேசாக சூடாக்கி வடைகளைப் போட்டு, உடனே எடுத்து தயிரில் போட்டு, ஒரு அகலமான தட்டில் பரவலாக வைத்து, மேலே கேரட் தூவி, பூந்தி சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

பிஸிபேளாபாத்

தேவையானவை: அரிசி - 500 கிராம், துவரம்பருப்பு - 400 கிராம், சின்ன வெங்காயம் (தோல் உரித்தது) - 20, உருளைக்கிழங்கு, கேரட், குடமிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 10, உரித்த பச்சைப் பட்டாணி  - ஒரு கப், புளி - 25 கிராம், காய்ந்த மிளகாய் - 4, கொப்பரைத் தேங்காய் -  பாதி அளவு,  தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி - 6 டீஸ்பூன் நெய் - 100 மில்லி, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், புதினா - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியுடன் பருப்பு சேர்த்து, ஒரு பங்குக்கு நான்கு பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து ஐந்து விசில் விட்டு இறக்கவும். கேரட், உருளை, பீன்ஸ், குடமிளகாய் எல்லாவற்றையும் நறுக்கி, சின்ன வெங்காயம், பட்டாணி சேர்த்து நெய் விட்டு வதக்கவும். புளியை அரை லிட்டர் தண்ணீர் விட்டு கரைத்து, வதக்கிய காய்களுடன் சேர்த்து... உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு... காய்ந்த மிளகாய், கொப்பரைத் தேங்காய் துண்டுகள், தனியா, கடலைப்பருப்பை வறுத்து மிக்ஸியில் பொடித்து, கொதிக்கும் சாம்பாருடன் சேர்த்து மேலும் கொதிக்க விட்டு இறக்கவும். வேக வைத்த சாதம் - பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு, சாம்பாரை ஊற்றி நன்கு மசிக்கவும். புதினாவை வதக்கிப் போட்டு நன்கு கலக்கவும்.

மிக்ஸ்டு சேவை

தேவையானவை: புழுங்கல் அரிசி - 250 கிராம், பொடியாக நறுக்கிய அல்லது  துருவிய கேரட்,  பொடியாக நறுக்கிய குடமிளகாய் , தேங்காய் துருவல், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப், சிறிய பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்) - 3, எலுமிச்சம் பழம் - ஒன் று, கடுகு - தேவையான அளவு, பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து களைந்து, மிக்ஸியில் கெட்டியாகவும் நைஸாகவும், தோசை மாவு பதத்தில் அரைக்கவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு, மாவை சிறிது உப்பு சேர்த்துக் கலந்து, கெட்டியாகக் கிளறவும். கிளறிய மாவை கெட்டியாக பிசைந்து உருட்டவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். சேவை பிழியும் அச்சில் உருண்டைகளைப் போட்டு, சேவையாக பிழிந்து, அதை மூன்று பங்குகளாக பிரிக்கவும். கேரட், பட்டாணி, குடமிளகாய், சிறிதளவு பச்சை மிளகாயை வதக்கி ஒரு பங்கு சேவையுடன் சேர்த்து, கடுகு தாளித்து கலக்கவும். தேங்காய் துருவலில் சிறிதளவு கடுகு, பச்சை மிளகாய் தாளித்து தேங்காய் சிவக்கும் வரை வறுத்து மற்றொரு பங்கு சேவையுடன் கலந்து சிறிதளவு வறுத்த முந்திரி சேர்க்கவும். கடுகு, சிறிது பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, மஞ்சள்தூள் சேர்த்து தாளித்து மீதமுள்ள சேவையுடன் கலந்து எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும். மீதமுள்ள முந்திரியை சேர்க்கவு ம். கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி மேலே தூவவும்.

சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

தேவையானவை: சேப்பங்கிழங்கு - 500 கிராம், சோள மாவு - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 200 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சேப்பங்கிழங்கை குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். ஆறியவுடன் தோல் உரித்து சரிபாதியாக நறுக்கவும். அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, நறுக்கிய சேப்பங்கிழங்கு துண்டுகளில் சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது சிறிதாக சேப்பங்கிழங்கு துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: மாவுடன் தண்ணீர் சேர்க்கக் கூடாது, சேப்பங்கிழங்குடன் சோள மாவு சேர்ப்பதால் மொறுமொறுவென இருக்கும்.

வெஜிடபிள் புலாவ்

தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், பீன்ஸ் - 6, குடமிளகாய் (சிறியது) - ஒன்று, உரித்த பச்சைப் பட்டாணி - ஒரு கப், கேரட், பெரிய வெங்காயம் - தலா ஒன்று, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரி - 10, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, இரண்டு விசில் விட்டு இறக்கவும். பீன்ஸ், குடமிளகாய், கேரட், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி, பச்சைப் பட்டாணி சேர்த்து நெய் விட்டு வதக்கி, உப்பு போட்டு சாதத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன், வறுத்த முந்திரி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்தால்... வெஜிடபிள் புலாவ் ரெடி!

குறிப்பு: பனீர் பொரித்து சேர்க்கலாம். இதற்கு தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய் ராய்தா சூப்பர் காம்பி னேஷன்!

கோசுமல்லி

தேவையானவை: பாசிப்பருப்பு - 100 கிராம், கேரட் துருவல், வெள்ளரிக்காய் துருவல்- தலா ஒரு கப், எலுமிச்சம் பழம் - ஒரு மூடி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு

செய்முறை: பாசிப்பருப்பை ஊற வைத்து, தண்ணீர் வடியவிட்டு... கேரட் துருவல், வெள்ளரிக்காய் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து, எலுமிச்சை சாறு பிழிந்து, நறுக்கிய கொத்துமல்லி சேர்த ்து நன்கு கலக்கவும். கடுகு தாளித்து சேர்க்கவும்.

பொங்கல்

தேவையானவை: அரிசி - 250 கிராம், பாசிப்பருப்பு - ஒரு சிறிய கப், பொடியாக நறுக்கிய இஞ்சி  - 2 டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு,  நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பையும் அரிசியும் ஒன்று சேர்த்து லேசாக சூடு வரும் வரை வறுத்து, ஒரு பங்கு அரிசிக்கு ஐந்து பங்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மிளகு, சீரகத்தை லேசாக மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு இஞ்சி, மிளகு - சீரகப் பொடி, பெருங்காயத்தூள் போட்டு வறுத்து... கறிவேப்பிலை, வறுத்த முந்திரி சேர்க்கவும். இதை வேகவைத்த சாதத்துடன் கலந்து தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: தேங்காய் சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன். சாம்பார், கொத்சுவும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

பீன்ஸ் பருப்பு உசிலி

தேவையானவை: பீன்ஸ் - 200 கிராம், துவரம்பருப்பு - 2 கப், கடலைப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 3,  கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பீன்ஸை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவிடவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வேக வைத்த பீன்ஸை தண்ணீர் வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... அரைத்த பருப்பு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறவும். பின்பு பீன்ஸையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: இதே முறையில் கோஸ், அவரைக்காய், கொத்தவரங்காயிலும் பருப்பு உசிலி தயாரிக்கலாம்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு

தேவையானவை: வெண்டைக்காய் - 20, அதிக புளிப்பு இல்லாத மோர் - 500 மில்லி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு கப், அரிசி - ஒரு டீஸ்பூன்,  கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு -  தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காய்களை காம்பு நீக்கி இரு த ுண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கி தனியே வைக்கவும். அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, மோருடன் கலந்து, உப்பு போட்டுக் கலக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம் தாளித்து...  மோர் கலவையை சேர்த்து, வதக்கிய வெண்டைக்காய்  துண்டுகளையும் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: இதேமுறையில் கத்திரிக்காயிலும் மோர்க்குழம்பு தயாரிக்கலாம்

பருப்பு வடை

தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடிகட்டி... காய்ந்த மிளகாய் இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாகவும், சிறிது கொரகொரப்பாகவும் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்து வைத்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை

தேவையானவை: காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று, சோள மாவு - 2 டீஸ்பூன், கடலை மாவு, அரிசி மாவு - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 200 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை, கொஞ்சம் பெரிய சைஸ் பூக்களாக நறுக்கி, தண்ணீர் விட்டு சிறிது நேரம் சூடாக்கி, தண்ணீர் வடிக்கவும். சோள மாவு, கடலை மாவு, கேசரி பவுடர், அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, காலிஃப்ளவருடன் சேர்த்து நன்கு பிசிறவ ும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிசிறி வைத்த காலிஃப்ளவரை பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:  காலிஃப்ளவரை வேக வைத்து, மசாலா கலவையும் தயார் செய்து வைத்து, சாப்பிடும் சமயம் சூடாகப் பொரித்தால், மிகவும் ருசியாக இருக்கும்.

கதம்ப சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - 200 கிராம், புளி - 100 கிராம், சாம்பார் பொடி - 6 டீஸ்பூன், கத்திரி க்காய், முருங்கைக்காய், கேரட் - தலா ஒன்று, அவரைக்காய் - 4, பச்சை மிளகாய் - 2 , தேங்காய் துருவல் - ஒரு கப், கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை குக்கரில் வைத்து குழ ைவாக வேகவிடவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை வறுத்து, தேங்காய் துருவல்  சேர்த்து அரைக்கவும். கத்திரிக்காய், முருங்கைக்காய், கேரட், அவரைக்காய், பச்சை மிளகாயை நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கவும். புளிக் கரைசலை அதில் விட்டு... உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். அரைத்து வைத்திருக்கும் கடலைப்பருப்பு கலவை, வேக வைத்த துவரம்பருப்பு இரண்டையும் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.

மணத்தக்காளி வற்றல் குழம்பு

தேவையானவை: புளி - 25 கிராம், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், வெந்தயம், கடுகு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மணத்தக்காளி வற்றல், எண்ணெய், சாம்பார் பொடி - த லா 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல் ஆகியவற்றை தாளித்து, புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: இதே முறையில், பச்சை காய்களை பயன்படுத்தியும் குழம்பு தயாரிக்கலாம்.

சேனை வறுவல்

தேவையானவை: சேனைக்கிழங்கு - 250 கிராம், மஞ்சள்  தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சேனையை தோல் சீவி, வறுவலுக்கு நறுக்கும் விதத்தில் சிறு துண்டுகளாக நறுக்கி, நன்றாகக் கழுவி தண்ணீர் வடியவிடவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசிறி வைத்திருக்கும் சேனைத் துண்டுகளைப் பொரித்து எடுத்து,  மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைத்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும் 

அவியல்

தேவையானவை: கத்திரிக்காய் - 2, பீன்ஸ் - 6, சௌசௌ - பாதி, அவரைக்காய் - 10, கேரட், உருளைக்கிழங்கு - தலா ஒன்று, பரங்கிக்கீற்று - பாதி அளவு, பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல், தயிர் - தலா ஒரு கப், தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

கத்திரிக்காய், பீன்ஸ், அவரைக்காய், சௌசௌ, கேரட், பரங்கிக்கீற்று, உருளைக்கிழங்கு ஆகியவற்றை பெரிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேங்காய் - பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்து சேர்த்து, தயிர் சேர்த்து, தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: அடைக்கு, இந்த அவியல் தொட்டு சாப்பிட்டால்.. அற்புத சுவையில் இருக்கும்.

பூரி - சன்னா

தேவையானவை: கோதுமை மாவு - 250 கிராம், கொண்டைக்கடலை - 100 கிராம், தக்காளி, - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு கப், கசகசா - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் தேவையான உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து சிறிய பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கொண்டைக்கடலையை ஊற வைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். தக்காளி, காய்ந்த மிளகாய், கசகசா, தேங்காய் துருவல், தனியா ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து, வேக வைத்த கொண்டைக் கடலையுடன் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

குறிப்பு: பூரி - சன்னா மிகவும் சுவையான காம்பினேஷன். கோதுமை மாவு பிசைந்த உடனேயே பூரியை பொரித்துவிட வேண்டும். சன்னாவின் மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவலாம்.

ஜீரா போளி

தேவையானவை: ரவை, சர்க்கரை - தலா 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 500 மில்லி.

செய்முறை: ரவையை தண்ணீர், கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு, இதை மீண்டும் பிசைந்து அப்பள வடிவில் இட்டு எண்ணெயில் பொரிக்கவும். சர்க்கரைப் பாகு வைத்து (கம்பிப் பதம்), பொரித்த போளிகளைப் போட்டு இருபுறமும் சர்க்கரைப் பாகு படும்படி புரட்டி, தனியாக தட்டில் எடுத்து வைக்கவும். மேலே ஏலக்காய்த்தூள் தூவி பரிமாறவும்.

குறிப்பு: இதை சாதாரண ரவையில் செய்ய வேண்டும். ரோஸ்டட் ரவை பயன்படுத்தக் கூடாது. ஒரு வாரம் வரை வைத்தி ருந்து சாப்பிடலாம். கொதிக்கும் பாலில் இந்த போளியை நனைத்து எடுத்து, ஊறிய உடன் சாப்பிட்டால்... சூப்பர் சுவையில் இருக்கும்.

பால் பாயசம்

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கைப்பிடி அளவு, பால் - 2 லிட்டர், சர்க்கரை - 400 கிராம், வறுத்த முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, குங்குமப்பூ - ஒரு சி ட்டிகை

செய்முறை: பாசுமதி அரிசியை மிக்ஸியில் ரவை போல உடைத்து பால் சேர்த்து குக்கரில் வேகவிடவும் (குக்கரை மூடக் கூடாது. அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறிவிட வேண்டும்). பால் கொதித்து, அரிசி வெந்து,  பால் பாதியளவுக்கு குறுகி  வரும்போது சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு... வறுத்த முந்திரி, ஏலக்காய்த் தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: பாதாம்பருப்பை நான்கு பொடித்து சேர்க்கலாம்.

அக்காரவடிசல்

தேவையானவை: அரிசி - அரை கிலோ, வெல்லம் - கால் கிலோ, பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 200 கிராம், கல்கண்டு - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,  உலர் திராட்சை, வறுத்த முந்திரிப்பருப்பு - தலா 10, நெய் - 100 மில்லி,  குங்குமப்பூ - சிறிதளவு.

செய்முறை: அரிசியுடன் ஒரு லிட்டர் பால், அரை லிட்டர் தண்ணீர் கலந்து குக்கரில் வைத்து குழைவாக வேகவிடவும். வெல்லத்தைப் பொடித்து நீரில் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். வேக வைத்த சாதத்துடன் வெல்லப்பாகு, சர்க்கரை, கல்கண்டு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். நெய்யில் திராட்சையை வறுத்து சேர்த்து, வறுத்த முந்திரிப்பருப்பையும் போடவும்... ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்.

பழப்பச்சடி

தேவையானவை: தக்காளிப்பழம் - 4, திராட்சைப் பழம் - 100 கிராம், சர்க்கரை - 2 கப், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: தக்காளியை நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். சர்க்கரையை நனையும்வரை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். கம்பிப் பதம் வந்ததும் வதக்கியத் தக்காளியைப் போட்டு, பிறகு திராட்சைப் பழத்தையும் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

குறிப்பு: பப்பாளிப்பழத் துண்டுகள், பைனாப்பிள் துண்டுகளையும் சேர்க்கலாம்.

 வெண்டைக்காய் ரோஸ்ட்

தேவையானவை: வெண்டைக்காய் - 250 கிராம், கடலை மாவு, அரிசி மாவு - தலா 4 டீஸ்பூன், சோள மாவு - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு,

செய்முறை: வெண்டைக்காயை கழுவி, உலரவிட்டு பெரிய துண்டுகளாக நறுக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, வெண்டைக்காயுடன் நன்றாக கலக்கவும். பிறகு, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும் !

பைனாப்பிள் ரசம்

தேவையானவை: பைனாப்பிள் - 4 துண்டுகள், புளி ஒரு சிறிய எலுமிச்சம் பழ அளவு, தண்ணீர் - 250 மில்லி, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், மிளகு - சீரகத்தூள் - கால் டீஸ்பூன், வேக வைத்த பருப்பு -  ஒரு கப், கடுகு - கால் டீஸ்பூன்,  கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை  தண்ணீர் விட்டுக் கரைத்து, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, பைனாப்பிளை பொடியாக நறுக்கிப் போட்டு, நன்றாக கொதிக்க விடவும். வேக வைத்த பருப்பை நன்கு மசித்து கரைத்து விட்டு... கடுகு, கறிவேப்பிலை, மிளகு - சீரகத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.

ஃப்ரூட் தயிர்சாதம்

தேவையானவை: அரிசி - 250 கிராம், புளிக்காத தயிர் - 100 கிராம், கறுப்பு திராட்சை பச்சை திராட்சை - தலா 10, மாதுளம் முத்துக்கள் - ஒரு கப், கேரட் துருவல் - 4 டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், பால் - 300 மில்லி, வறுத்த முந்திரி - 10, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பங்கு அரிசிக்கு 4 பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். சாதத்தை நன்கு மசித்து பால், தயிர் , வெண்ணெய், உப்பு சேர்த்துப் பிசைந்து... திராட்சை, மாதுளம் முத்துக்கள், கேரட் துருவல் சேர்த்துக் கலக்கவும். மேலே வறுத்த  முந்திரி தூவவும்

ஐயங்கார் வீட்டு சாம்பார்

 ஐயங்கார் வீட்டு சாம்பார் செய்வது எப்படி ....

தென்னிந்திய உணவுகளில் சாம்பார் மிகவும் பிரபலமானது. இத்தகைய சாம்பாரிலேயே பல ஸ்டைல்கள் உள்ளன. இப்போது அதில் ஒன்றாக ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பாரை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம். இந்த சாம்பார் செய்வது மிகவும் ஈஸி. மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பாரின் எளிய செய்முறையைப் பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 6-7
மாங்காய் - 1
முருங்கைக்காய் - 1
புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 3-4 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் அனைத்து பருப்புக்களையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க ஆரம்பித்ததும், மூடி வைத்து 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.

பருப்பு முக்கால் பதம் வெந்ததும், அதில் முருங்கைக்காய், உப்பு, சர்க்கரை, புளிச்சாறு, சாம்பார் பொடி சேர்த்து கிளறி, 20-25 நிமிடம் மிதமான தீயில் நன்கு கொதிக்க வைக்கவும்.

பிறகு மற்றொரு அடுப்பில், சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்து கிளறி இறக்கினால், ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார் ரெடி...

Tuesday, February 4, 2025

கோவில் புளியோதரை

சுவை மிகுந்த கோவில் புளியோதரை செய்வது எப்படி...

*தேவையான பொருட்கள்:*

 நல்லெண்ணெய் - 1 கப்
 
பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்:
 
காய்ந்த மிளகாய் - 6
உளுந்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
எள் - 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த தேங்காய் துருவல் - 2 டீ ஸ்பூன்
 
வறுக்கவேண்டிய பொருட்கள்:
முந்திரி- 1/2 கப்
வேர்க்கடலை - 1/2 கப்
 
தாளிக்கவேண்டிய பொருட்கள்:
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
உளுந்து - 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் துாள் - 1 சிட்டிகை
பெருங்காயம் - 1 சிட்டிகை
கருவேப்பிலை - 2 ஈர்க்கு
உப்பு - தேவைக்கு
புளி - 50 கிராம்
பச்சரிசி சாதம் - 2 கப்

செய்முறை:*

 வாணலியை சூடாக்கி, இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.

 இதில், உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், தனியா சேர்த்து, வாசனை வரும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்து, எள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து, ஆறியதும், பொடித்துக் கொள்ளவும்.

 வாணலியில் அரை கப் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், முந்திரி பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும். முந்திரியை தனியே எடுத்து வைத்து விட்டு, அதே எண்ணெய்யில், வேர்க்கடலையை வறுத்து தனியே வைக்கவும்.

அதே வாணலியில், மேலும் நான்கு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, கடுகு சேர்த்து வெடித்ததும், உளுந்து, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, சீரகம், சிறிது மஞ்சள், பெருங்காயத் துாள் சேர்த்து, புளியை, 200 மில்லி நீரில் கரைத்து ஊற்றி, எண்ணெய் பிரியும் வரை வற்ற விடவும்.

 இதில், வேக வைத்த பச்சரிசி சாதத்தை மிதமான சூடடில், புளி கலவையில் சேர்த்து கலந்து, பொடித்த மசாலா கலந்து, முந்திரி, வேர்க்கடலையை சேர்த்து, பச்சை கறிவேப்பிலை போடவும்.

பூச்சி பிடிக்காமல் இருக்க

 அடுப்படி இரகசியங்கள் தெரிந்து கொள்ளுங்கள்...

அரிசி, பருப்புகளில் வண்டுகள், பூச்சிகள் வராமல் இருக்க என்ன செய்வது?

வெயில்காலங்களில் அவ்வளவாக பிரச்னை இருக்காது. மழை மற்றும் குளிர்காலங்களில் தான் தானியங்களில் அதிக அளவில் வண்டுகள் வர ஆரம்பிக்கும். அப்படி நாம் வீட்டில் அரைத்து வைத்திருக்கும் மாவு மற்றும் அரிசி, பருப்பு ஆகியவற்றில் வண்டு வராமல் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

உளுத்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால் மாவு மாதிரியான பொருள் வெளியேறும். தட்டியபிறகு டப்பாவில் வைத்தால் வண்டு வராது.


பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்புத்தூள் கலந்து நிழலில் உலர்த்தி பிறகு டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள், பூச்சிக் கூடுகள் பிடிக்காது.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பில் பூச்சி வராமல் இருக்க காய்ந்த வேப்பிலைகளையும் வசம்புத்துண்டுகளையும் போட்டு வைத்தால் போதும் பூச்சிகள் வராது.

அரிசியில் மிளகாய்வற்றல் சிலவற்றைப் போட்டு வைத்தால் வண்டு பிடிக்காது.

புளியை வாங்கி வந்ததுமே அதிலுள்ள கொட்டைகளையும், நார்களையும் நீக்கிவிட்டு நன்கு வெயிலில் காய வைத்து சிறிது கல் உப்பு சேர்த்து ஜாடியில் போட்டு வைத்தால் ஓர் ஆண்டுக்கு மேல் புழுக்கள், பூச்சிகள் வராமலிருக்கும்.

தனியா டப்பாவில் நாலைந்து துண்டுகள் அடுப்புக்கரியை போட்டுவைத்தால் வண்டுகள் அண்டாமல் இருக்கும்.

சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளில் எறும்பு வராமலிருக்க நான்கைந்து கிராம்புகளை போட்டு வைத்தால் போதும் பூச்சிகள் வராது.

அரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து கட்டி மாவுக்குள் போட்டுவிட வேண்டும். இப்படி செய்தால் பூச்சிகள் வராது.

எந்த பொருளாக இருந்தாலும் அப்படியே வை‌த்தா‌ல் பூ‌ச்‌சி ‌பிடி‌த்து‌விடு‌ம். அவ்வ‌ப்போது சூ‌ரிய ஒளியில் வை‌த்து எடு‌க்க வே‌ண்டு‌ம்.

Monday, January 27, 2025

சம்பா ரவை கிச்சடி தயார். இதை

 சம்பா ரவை கிச்சடி செய்வது எப்படி ...

சம்பா ரவா கிச்சடி செய்வதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை ரவையை சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.

குறைந்தது மூன்று நிமிடங்கள் வரை ரவையை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளலாம். வறுத்த இந்த ரவையை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம்.

அடுத்து அதே கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் மூன்று கிராம்பு, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஏலக்காய் 2, பட்டை இரண்டு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், காரத்திற்கு ஏற்ப மூன்று பச்சை மிளகாய், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

ரவா கிச்சடி செய்வதற்கு தேவையான காய்கறிகளை இதில் கலந்து கொள்ளலாம். உதாரணமாக கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர், தக்காளி, குடைமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து காய்கறிகளை மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து ஒரு கப் ரவைக்கு மூன்று கப் அளவு வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன்படி மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் நாம் வறுத்து வைத்திருக்கும் ரவையை அதில் சேர்த்துக் கொள்ளலாம். கட்டிகள் விழாக வண்ணம் ரவையை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக மூடி போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடம் வரை ரவையை வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சம்பா ரவை கிச்சடி தயார்.

இதை வெறுமையாக சாப்பிடும் பொழுது சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி உடன் சேர்த்து சாப்பிடலாம்.

தஞ்சாவூர் தவலை அடை

 *​​தவலை அடை*

*தஞ்சாவூர் ஸ்பெஷல்*

🍱 தேவையான பொருட்கள்: 

 பச்சரிசி - 1/2 கப்
துவரம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்  
உப்பு - 3/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்  
மிளகு - 3/4 டீஸ்பூன் 
துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன் கடுகு - 3/4 டீஸ்பூன்  
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை  கறிவேப்பிலை - சிறிது  
எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன் 

🍴 செய்முறை: 👇

முதலில் அரிசி மற்றும் பருப்பை நீரில் 2 முறை கழுவி, நீரில் குறைந்தது 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் பருப்பு மற்றும் அரிசியில் உள்ள நீரை முற்றிலும் வற்றிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சீரகம், உப்பு மற்றும் மிளகு சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, துருவிய தேங்காயை போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, நீர் முற்றிலும் வற்றும் வரை வேக வைத்து இறக்கி, 2-3 நிமிடம் குளிர வைக்க வேண்டும்

மாவானது வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போது, தயாரித்து வைத்துள்ள மாவை சிறு எலுமிச்சை உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் எண்ணெய் தடவிய வாழை இலையில் ஒவ்வொரு உருண்டைகளையும் வைத்து, தட்டையாக தட்டிக் கொண்டு, நடுவே ஒரு ஓட்டையை போட வேண்டும்

பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் தட்டி வைத்துள்ளதைப் போட்டு, அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும், பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் தட்டி தோசைக் கல்லில் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான தஞ்சாவூர் தவலை அடை தயார்.

Thursday, January 23, 2025

ஐயர் வீட்டு சாம்பார் சாதம்

 *ஐயர் வீட்டு சாம்பார் சாதம் செய்வது எப்படி ......* 👆👇🏻

தேவையான பொருட்கள் 

குக்கரில் வேக வைக்க ▢1 கப் அரிசி ▢½ கப் துவரம் பருப்பு ▢5 கப் தண்ணீர் ▢¼ tbsp மஞ்சள் தூள், ½ tbsp உப்பு ▢¼ tbsp பெருங்காய தூள், 1 tbsp எண்ணெய் 

சாம்பார் சாதம் செய்ய 

3 tbsp எண்ணெய் ▢2 tbsp நெய் ▢1 tbsp கடுகு உளுந்த பருப்பு ▢1 tbsp சீரகம் ▢½ tbsp வெந்தயம், 1 கொத்துகருவேப்பிலை 2 வர மிளகாய் ▢10 சின்ன வெங்காயம் தோலுரித்தது ▢உப்பு தேவையான அளவு ▢½ கப் பீன்ஸ் நறுக்கியது ▢½ கப் கேரட் நறுக்கியது ▢½ கப் உருளைக்கிழங்கு நறுக்கியது ▢1 தக்காளி நறுக்கியது ▢1 ½ மேசை கரண்டி சாம்பார் பொடி ▢¼ tbsp மஞ்சள் தூள் ▢1 சிட்டிகை பெருங்காய தூள் ▢½ tbsp மிளகாய் தூள் ▢¼ கப் புளி கரைசல் ▢½ tbsp சர்க்கரை ▢வேக வைத்த சாதம்▢1 tbsp நெய் 

செய்முறை 

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் துவரம் பருப்பு எடுத்துக் கொண்டு இரண்டு மூன்று முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி கொள்ளுங்கள். 

பின் அலசிய அரிசி பருப்பை குக்கரில் சேர்த்து அதனுடன் ஐந்து கப் அளவு தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு, பெருங் காயத்தூள்,  மற்றும் எண்ணெய் ஊற்றி ஐந்து விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள். 

பின் குக்கரில் உள்ள அரிசி, பருப்பு நன்கு வெந்து வந்ததும் பிரஷர் ரிலீஸ் செய்து குக்கரில் உள்ள சாதத்தை நன்கு மசித்து விடுங்கள். 

அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். 

பிறகு எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை மற்றும் வர மிளகாய் சேர்த்து தாளியுங்கள். 

பின் இதனுடன் தோலுரித்த சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி யவுடன் இதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய் கறிகளை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். 

காய்கறிகள் ஓரளவு வந்தவுடன் இதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கி விடுங்கள். 

பின் காய்கறிகள் முக்கால் வாசி வதங்கியதும் இதனுடன் காய் கறிகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து பின் சாம்பார் தூள் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். 

பின் நன்கு கொதித்து வரும் நேரத்தில் கால் கப் புளி கரைசல் மற்றும் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். 

பின் இதனுடன் வேகவைத்து மசித்த சாதத்தை சேர்த்து மேலும் தண்ணீர் தேவைப் பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.

பின்பு கடாயை ஒரு ஐந்து நிமிடம் மூடி வைத்து வேக வைத்து பின் கடைசியாக ஒரு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி நன்றாக கிளறி விட்டு சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடுங்கள். 

அவ்வளவுதான் அய்யர் வீட்டு சாம்பார் சாதம் தயாராகிவிட்டது......

Tuesday, January 21, 2025

சரவணபவன் ஹோட்டல் சாம்பார்

 சரவணபவன் ஹோட்டல் சாம்பார் செய்வது எப்படி ........

1/4 கப் துவரம்பருப்பு 
2 கத்தரிக்காய் 
1 முருங்கைக்காய்
10 சின்னவெங்காயம் 
1 தக்காளி
 2 பச்சைமிளகாய்
 உப்பு தேவைக்கு
 புளி எழுமிச்சைஅளவு


 *🍴அரைப்பதற்கு🕙:*

2 தேக்கரண்டி பொட்டுக்கடலை 
1 தக்காளி 
1 தேக்கரண்டி தேங்காய் 
4 தேக்கரண்டி சாம்பார் தூள்
 தக்காளி 1 சிறிது தாளிக்க 
1/4 தேக்கரண்டி கடுகு 
1/4 சிறிது சீரகம் 
1/4 சிறிது உளுத்தம் பருப்பு 
2 வற்றல் மிளகாய் 
கறிவேப்பிலை சிறிது 
மல்லித்தழை சிறிது 

Home made kichen 

மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருட்களை போட்டு நைசாக அரைத்து எடுக்கவும். புளியுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

 காய்கறிகளை பொடியாக நறுக்கவும், சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். குக்கரில் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்

வேக வைத்த பருப்புடன் மேலும் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நறுக்கிய காய்கறிகள், பச்சை மிளகாய், தக்காளி, பாதி வெங்காயம் போட்டு உப்பு சேர்த்து வேக விடவும். 

அரைத்த விழுது மற்றும் புளிக்கரைசலை வெந்த பருப்பு காய்க் கலவையில் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து பெருங்காயம், கிள்ளிய வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். 

சாம்பரை அதில் ஊற்றி மல்லித் தழை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். 

சுவையான ஹோட்டல் சரவண பவன் சாம்பார் தயார்.*

Monday, January 13, 2025

ஹோட்டல் சாம்பார் செய்வது எப்படி

 ஹோட்டல் சாம்பார் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

 ▢1/4 கப் துவரம்பருப்பு 
▢2 கத்தரிக்காய் 
▢1 முருங்கைக்காய் 
10 சாம்பார் வெங்காயம் 
▢1 தக்காளி 
▢2 பச்சைமிளகாய் 
உப்பு தேவைக்கு 
புளி எலுமிச்சைஅளவு 

அரைப்பதற்கு

▢2 தேக்கரண்டி பொட்டுக்கடலை 
▢1 தக்காளி 
▢1 தேக்கரண்டி தேங்காய் 
▢4 தேக்கரண்டி சாம்பார் 
தக்காளி 1 சிறிது தாளிக்க 
1/4 தேக்கரண்டி கடுகு 
▢1/4 சிறிது சீரகம் 
1/4 சிறிது உளுத்தம் பருப்பு 
▢2 வற்றல் மிளகாய் 
கறிவேப்பிலை சிறிது 
மல்லித்தழை சிறிது 

செய்முறை 

மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருட்களை போட்டு நைசாக அரைத்து எடுக்கவும். 

புளியுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

காய்கறிகளை பொடியாக நறுக்கவும், சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். 

குக்கரில் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். 

வேக வைத்த பருப்புடன் மேலும் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நறுக்கிய காய்கறிகள், பச்சை மிளகாய், தக்காளி, பாதி வெங்காயம் போட்டு உப்பு சேர்த்து வேக விடவும். 

அரைத்த விழுது மற்றும் புளிக் கரைசலை வெந்த பருப்பு காய்க் கலவையில் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். 

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்து பெருங் காயம், கிள்ளிய வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். 

சாம்பரை அதில் ஊற்றி மல்லித் தழை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். 

சுவையான ஹோட்டல் சாம்பார் தயார்.......

Saturday, January 11, 2025

ஸ்ரீரங்கம் வத்த குழம்பு

 ஸ்ரீரங்கம் வத்த குழம்பு

 *தேவையான பொருட்கள்.....* 

1 கப் சுண்டக்காய் ▢2 டீஸ்பூன் வெந்தயம் ▢2 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு ▢2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு ▢2 டேபிள் ஸ்பூன் மல்லி ▢1 டேபிள் ஸ்பூன் டேபிள் டீஸ்பூன் பெருங்காயத்தூள் ▢1 டீஸ்பூன் மஞ்சள்தூள் ▢4 வரமிளகாய் ▢புளி எலுமிச்சை அளவு ▢உப்பு தேவையான அளவு ▢50 கிராம் சின்ன வெங்காயம் ▢1 டேபிள்ஸ்பூன் வெல்லம் ▢1 டேபிள்ஸ்பூன் அரிசி ▢கறிவேப்பிலை சிறிது ▢நல்லெண்ணெய் தேவையான அளவு நல்லெண்ணெய் ▢1 டீஸ்பூன் கடுகு ▢1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு ▢1 டீஸ்பூன் கடலை பருப்பு 

செய்முறை .....

புளியை கரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்..... 

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.....

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்....

 பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து, அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க பின் அதில் அரைத்து வைத்துள்ள விடவும்.பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.....

 குழம்பு திக்கான பதம் வந்தவுடன் அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், ஸ்ரீரங்கம் வத்த குழம்பு ரெடி.....

Tuesday, January 7, 2025

மைசூர் மசாலா தோசை

 மைசூர் மசாலா தோசை 

தேவையானவை:

ஜவ்வரிசி  100 கிராம்
சர்க்கரை  ஒரு டீஸ்பூன்
தோசை மாவு  அரை கிலோ
காய்ந்த மிளகாய்  10
பூண்டு  5 பல்
உப்பு  தேவையான அளவு
மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன்
கடுகு, உளுந்து  அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு  ஒரு டீஸ்பூன்
சீரகம்  அரை டீஸ்பூன்
எண்ணெய்  தேவையான அளவு
பொடியாக நறுக்கிய  
பெரிய வெங்காயம்  ஒன்று
உருளைக்கிழங்கு  150 கிராம்
தக்காளி  ஒன்று
இஞ்சி  ஒரு துண்டு
பச்சைமிளகாய்  ஒன்று
பெருங்காயம்  சிறிதளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து அரைத்து, தோசை மாவுடன் கலந்து கொள்ளவும். காய்ந்த மிளகாய், பூண்டு சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயம், கடலைப்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், அரைத்த பூண்டுக் கலவையைச் சேர்த்து கலவை ஒன்றாகும் வரை வதக்கவும். இத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கைப் பாதியாக நறுக்கிச் சேர்க்கவும். கலவை கெட்டியானதும் இறக்கவும். சூடான தோசைக்கல்லில் தோசைமாவை ஊற்றி ஒருபுறம் வெந்ததும் அதன் மீது உருளைக்கிழங்குக் கலவையை வைத்து  தோசைக்கல்லிலேயே ரோலாக சுருட்டி எடுத்து தட்டில் வைத்துப் பரிமாறவும்

சுவையான பிசிபேளாபாத்

 சுவையான பிசிபேளாபாத்

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்

துவரம் பருப்பு - 1/2 கப்

பீன்ஸ் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 2 
பட்டாணி - 1/4 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 3
பூண்டு - 6 பல்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
முந்திரி - 10
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி - 2.1/2 டீஸ்பூன்
கருப்பு உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
சீரகம், எள்ளு - தலா 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1 இஞ்ச், காய்ந்த மிளகாய் - 5
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்

செய்யும் முறை:-

5 கப் அரிசியை தண்ணீருடன் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பருப்பு, காய்களை தனித்தனியே வேகவைத்துக் கொள்ளவும். 

மசாலாப் பொருட்களை எண்ணெயில் நன்றாக வறுத்து, பொடி செய்து கொள்ளவும். 

பின்னர் கடாயில் பூண்டு, தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் அரைத்த அரைத்த மசாலா பொடியைச் சேர்த்து நன்கு விழுதாகும் வரை வதக்கவும். 

அதன் பின் வேக வைத்த காய்கறி, பருப்பு சேர்த்துக் கலந்து இறுதியாக சாதத்தை சேர்த்து உப்புச் சேர்க்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து, சாதத்தில் நெய்யுடன் சேர்த்து கலக்கவும்.

சூடான, சுவையான பிசிபேளாபாத் ரெடி.

Monday, January 6, 2025

தஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார்

 *Thanjavur special Sambar / தஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார்* 

🍴Home made kichen 🕙

1 கப் துவரம் பருப்பு சிறிது எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சமைக்கப்பட்டது 

1 பெரிய வெங்காயம் 
2 தக்காளி
கறிவேப்பிலை 
மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன் 
1 கப் கலவை காய்கறிகள் (நான் முள்ளங்கியை மட்டுமே பயன்படுத்தினேன்)
எண்ணெய்
கடுகு விதைகள்
வெந்தய விதைகள் 
1 கப் புளி தண்ணீர் 
சுவைக்கு உப்பு
ஹிங்

சாம்பார் பொடிக்கு🕙

1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
1 டீஸ்பூன் சீரகம் 
1 டீஸ்பூன் சன்னா பருப்பு
மிளகு 1/2 டீஸ்பூன் 
2 சிவப்பு மிளகாய்.

*விரிவான செய்முறைக்கு* 

*🍴Home made kichen 🕙*

Sunday, January 5, 2025

காலிஃப்ளவர் கூட்டு

 காலிஃப்ளவர் கூட்டு செய்முறை

தேவையான பொருட்கள்:

 * காலிஃப்ளவர் - 1
 * பச்சை மிளகாய் - 2
 * தக்காளி - 1
 * பருப்பு (துவரம் பருப்பு) - 1/4 கப்
 * தேங்காய் துருவல் - 1/4 கப்
 * மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
 * மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
 * கடுகு - 1/2 தேக்கரண்டி
 * கறிவேப்பிலை - சிறிதளவு
 * எண்ணெய் - தேவையான அளவு
 * உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

 * பருப்பு வேகவைத்தல்: துவரம் பருப்பை நன்றாக கழுவி, சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

 * காய்கறிகளை நறுக்கவும்: காலிஃப்ளவரை சிறிய துண்டுகளாகவும், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

 * வறுத்தல்: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்க்கவும். பின்னர், நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

 * மசாலா சேர்த்தல்: மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

 * வேகவைத்த பருப்பு சேர்த்தல்: வேகவைத்த பருப்பை சேர்த்து கிளறவும்.

 * தேங்காய் தூள் அரைத்தல்: தேங்காய் துருவலை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.

 * தேங்காய் பேஸ்ட் சேர்த்தல்: அரைத்த தேங்காய் பேஸ்டை காய்கறி கலவையில் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

 * உப்பு சரிபார்த்தல்: தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

 * தண்ணீர் வற்றிய பின்: தண்ணீர் வற்றி, கூட்டு திக்காக வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்பு:

 * கூட்டுக்கு பதிலாக, கொஞ்சம் தண்ணீர் அதிகமாக சேர்த்து குழம்பாகவும் செய்யலாம்.

 * சுவைக்காக கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.

இந்த கூட்டு சாதம் மற்றும் சப்பாத்திக்கு மிகவும் ஏற்றது.

Friday, January 3, 2025

கல்யாண வீட்டு பருப்பு குழம்பு

கல்யாண வீட்டு பருப்பு குழம்பு செய்வது எப்படி ....

தேவையான பொருட்கள்

 ▢1/2 கப் துவரம் பருப்பு ▢1 தேக்கரண்டி பெருங்காயம் ▢உப்பு தேவையானஅளவு அரைக்க ▢1/4 கப் தேங்காய் துருவல் ▢2 பல் பூண்டு ▢1/4 தேக்கரண்டி சீரகம் ▢2 மிளகாய்வற்றல் ▢1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் தாளிக்க ▢1 சீரகம் ▢2 தேங்காய் எண்ணெய் ▢1/2 தேக்கரண்டி கடுகு ▢1 மிளகாய்வற்றல் ▢1 இணுக்கு கறிவேப்பிலை 

செய்முறை 

▢ துவரம் பருப்புடன்பெருங்காயம் சேர்த்து குழைய வேகவைத்து கடைந்து வைக்கவும்.   

▢ அரைக்க வேண்டிய பொருட்களை தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். 

▢ அரைத்த கலவையை வேகவைத்த பருப்புடன் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். 

▢ கொதித்ததும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சேர்த்து கிளறி மேலும் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• ••╝