Tuesday, February 4, 2025

கோவில் புளியோதரை

சுவை மிகுந்த கோவில் புளியோதரை செய்வது எப்படி...

*தேவையான பொருட்கள்:*

 நல்லெண்ணெய் - 1 கப்
 
பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்:
 
காய்ந்த மிளகாய் - 6
உளுந்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
எள் - 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த தேங்காய் துருவல் - 2 டீ ஸ்பூன்
 
வறுக்கவேண்டிய பொருட்கள்:
முந்திரி- 1/2 கப்
வேர்க்கடலை - 1/2 கப்
 
தாளிக்கவேண்டிய பொருட்கள்:
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
உளுந்து - 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் துாள் - 1 சிட்டிகை
பெருங்காயம் - 1 சிட்டிகை
கருவேப்பிலை - 2 ஈர்க்கு
உப்பு - தேவைக்கு
புளி - 50 கிராம்
பச்சரிசி சாதம் - 2 கப்

செய்முறை:*

 வாணலியை சூடாக்கி, இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.

 இதில், உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், தனியா சேர்த்து, வாசனை வரும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்து, எள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து, ஆறியதும், பொடித்துக் கொள்ளவும்.

 வாணலியில் அரை கப் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், முந்திரி பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும். முந்திரியை தனியே எடுத்து வைத்து விட்டு, அதே எண்ணெய்யில், வேர்க்கடலையை வறுத்து தனியே வைக்கவும்.

அதே வாணலியில், மேலும் நான்கு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, கடுகு சேர்த்து வெடித்ததும், உளுந்து, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, சீரகம், சிறிது மஞ்சள், பெருங்காயத் துாள் சேர்த்து, புளியை, 200 மில்லி நீரில் கரைத்து ஊற்றி, எண்ணெய் பிரியும் வரை வற்ற விடவும்.

 இதில், வேக வைத்த பச்சரிசி சாதத்தை மிதமான சூடடில், புளி கலவையில் சேர்த்து கலந்து, பொடித்த மசாலா கலந்து, முந்திரி, வேர்க்கடலையை சேர்த்து, பச்சை கறிவேப்பிலை போடவும்.

பூச்சி பிடிக்காமல் இருக்க

 அடுப்படி இரகசியங்கள் தெரிந்து கொள்ளுங்கள்...

அரிசி, பருப்புகளில் வண்டுகள், பூச்சிகள் வராமல் இருக்க என்ன செய்வது?

வெயில்காலங்களில் அவ்வளவாக பிரச்னை இருக்காது. மழை மற்றும் குளிர்காலங்களில் தான் தானியங்களில் அதிக அளவில் வண்டுகள் வர ஆரம்பிக்கும். அப்படி நாம் வீட்டில் அரைத்து வைத்திருக்கும் மாவு மற்றும் அரிசி, பருப்பு ஆகியவற்றில் வண்டு வராமல் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

உளுத்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால் மாவு மாதிரியான பொருள் வெளியேறும். தட்டியபிறகு டப்பாவில் வைத்தால் வண்டு வராது.


பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்புத்தூள் கலந்து நிழலில் உலர்த்தி பிறகு டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள், பூச்சிக் கூடுகள் பிடிக்காது.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பில் பூச்சி வராமல் இருக்க காய்ந்த வேப்பிலைகளையும் வசம்புத்துண்டுகளையும் போட்டு வைத்தால் போதும் பூச்சிகள் வராது.

அரிசியில் மிளகாய்வற்றல் சிலவற்றைப் போட்டு வைத்தால் வண்டு பிடிக்காது.

புளியை வாங்கி வந்ததுமே அதிலுள்ள கொட்டைகளையும், நார்களையும் நீக்கிவிட்டு நன்கு வெயிலில் காய வைத்து சிறிது கல் உப்பு சேர்த்து ஜாடியில் போட்டு வைத்தால் ஓர் ஆண்டுக்கு மேல் புழுக்கள், பூச்சிகள் வராமலிருக்கும்.

தனியா டப்பாவில் நாலைந்து துண்டுகள் அடுப்புக்கரியை போட்டுவைத்தால் வண்டுகள் அண்டாமல் இருக்கும்.

சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளில் எறும்பு வராமலிருக்க நான்கைந்து கிராம்புகளை போட்டு வைத்தால் போதும் பூச்சிகள் வராது.

அரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து கட்டி மாவுக்குள் போட்டுவிட வேண்டும். இப்படி செய்தால் பூச்சிகள் வராது.

எந்த பொருளாக இருந்தாலும் அப்படியே வை‌த்தா‌ல் பூ‌ச்‌சி ‌பிடி‌த்து‌விடு‌ம். அவ்வ‌ப்போது சூ‌ரிய ஒளியில் வை‌த்து எடு‌க்க வே‌ண்டு‌ம்.