ஆகாச கருடனை வீட்டில் வைப்பதால் கிடக்கும் பலன்கள்...!!
ஆகாச கருடன் என்ற இந்த கிழங்கை கயிற்றில் கட்டி தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும். மேலும் காற்றில் உள்ள ஈரத்தை ஈர்த்து வாங்கி உயிர் வாழும் சக்தி கொண்டது. முளைவிட்டு கொடியாக படர்ந்து விடும்.
மூலிகைகளில் அஷ்டகர்ம மூலிகைகள் என்பன மிகச் சிறப்பு வாய்ந்தன. இவை அஷ்ட கர்மமான மாந்திரீக கர்மங்களுக்கு உதவுவன. இதற்கு 'சாகா மூலி' என்ற பெயரும் உண்டு. இந்த கிழங்கில் சில அமானுஷ்ய சக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம் போன்ற மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப் படுவர்.
ஆகாச கருடன் கிழங்கை கயிறில் கட்டி வீட்டின் வாசற்படிக்கு வெளியில் தலையில் படாதவாறு கட்டிவிட வேண்டும். கிழங்கு அழுகினால் வீட்டில் உள்ளவர்களின் மேல் கண் திர்ஷ்டி அதிகமாக உள்ளது என அர்த்தம், கிழங்கு நன்கு துளிர்விட்டு வளர்ந்தால் கண் திர்ஷ்டி நீங்கி வீடு நன்கு சுபிட்சமடையும். இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம். அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.
பயன்கள்: இதற்கு விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் இளைத்த உடலைத் தேற்றவும், உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. ஆனால் சித்த மருத்துவரின் ஆலோசனையின்படி சாப்பிடுதல் வேண்டும்.
கடும் விஷத்தையுடைய சர்ப்பங்கள்(பாம்புகள்) இந்தக் கருடன் கிழங்கைக் கண்டால் அஞ்சி நடுநடுங்கும். பாம்பு விஷங்கள், தேள், பூரான் போன்ற விஷங்கள் எளிதில் முறியும். பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை அளவு சாப்பிட்டால் வாந்தியும், மலம் கழியும். உடனே விஷமும் முறிந்துவிடும்.
ராகு கேது தோசம் உள்ளவர்கள் இந்த ஆகாச கருடன் கிழங்கு வீட்டில் தொங்க விட அதன் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
மருத்துவ ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் எண்ணற்ற மருத்துவர்களை கொண்ட ஆகாச கருடன் கிழங்கு பற்றி இதில் பார்ப்போம்.
இந்த கிழங்கு 16 வகைப்படும். இதன் இலையும், நமக்கு பலன் தரக்கூடியது என்று கூறுகின்றனர் சித்த மருத்துவர்கள். ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால், அது காற்றையும், வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் எதுவுமில்லாமல் கொடியாக இலையுடன் சேர்ந்து வளரக்கூடியது. இது காடு மலைகளில் அதிகமாக காணப்படும். இதன் இலை கோவை இலை போன்று இருக்கும் .இதன் கொடி மென்மையானதாக இருக்கும். பூக்கள் சிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
பாம்பு கடித்தவுடன் ஆகாச கருடன் கிழங்கில் இருந்து ஒரு எலுமிச்சை அளவு நறுக்கி வெறும் வாயில் தின்னும் படி செய்தால் வாந்தியும் வந்துவிடும். விஷம் வெளியே வந்துவிடும். இந்த கிழங்கை பொடியாக நறுக்கி வெய்யிலில் காயவைத்துச் சுக்கு போல காய்ந்த பின் எடுத்து மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து தினசரி காலை 10 கிராம், மாலை 10 கிராம் எடுத்து வாயில் போட்டு சிறிதளவு வெந்நீர் குடித்து வர மண்ணுளி பாம்பின் விஷம் முறியும், இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது,
ஆகாச கருடன் என்ற இந்த கிழங்கை கயிற்றில் கட்டி தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும். காற்றில் உள்ள ஈரப்பதத்தை வாங்கிக்கொண்டு உயிர்வாழும் சக்தி உடையது. இவை அஷ்ட கர்மங்களுக்கு உதவும் என்கின்றனர். சாகா மூலி என்று பெயர் பெற்ற இந்த கிழங்கு சில அமானுஷ்ய சக்திகளை வீட்டுக்குள் வரவிடாமல் தடுக்கும். மேலும் திருஷ்டி தோஷங்களை போக்கும் தன்மை கொண்டது. பில்லி, சூனியம் போன்ற மாந்திரீக வினைகளை இழுத்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது.
🙏🙏🙏
No comments:
Post a Comment